மாஸ் பிளான்! மெரினா மாற்றுத்திறனாளிகள் பாதை சிக்கலுக்கு தீர்வு! இனி எந்த புயல் வந்தாலும் சிக்கலில்லை
சென்னை: சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையில் உள்ள பார்வை மேடை இனிமேல் சேதம் அடையாமல் இருக்க தமிழ்நாடு அரசு புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது.
சென்னை மெரினாவில் கடந்த வருடம் இறுதியில் சில வாரங்களுக்கு முன் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சாய்தள பாதை அமைக்கப்பட்டது. கடந்த சில வருடங்களாக அவ்வப்போது வார இறுதி நாட்களில் மட்டும் இந்த சாய்தள பாதைகள் தற்காலிகமாக அமைக்கப்படும்.
இவை எல்லாம் தற்காலிக பாதைகள்தான். வார இறுதி முடிந்த பின் இந்த பாதைகள் நீக்கப்படும். அப்போதில் இருந்தே இந்த பாதைகள் நிரந்தரமாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.
மாற்றுத்திறனாளிகள் பலர் தங்களுக்கு நிரந்தர பாதை வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த தற்காலிக அமைக்கப்பட்ட பின் அதற்கு பிரம்மாண்ட வரவேற்பு இருந்தது. ஆயிரக்கணக்கில் மாற்று திறனாளிகள் வந்து இங்கு பார்வையிட்டு சென்றனர். ஆனால் இது தற்காலிக பாதை என்பதால் அதன்பின் நீக்கப்பட்டது. இதை நிரந்தரமாக வேண்டும் என்று மக்கள் பலரும் தீவிரமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஸ்டாலின்
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், எத்தனை முறை சென்றாலும் சலிக்காதது கடல் என்பார்கள். அந்தக் கடலலையில் ஒருமுறையேனும் கால் நனைக்க நினைத்திருந்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணம் நனவாகும் வண்ணம் தற்காலிகப் பாதையினை ஏற்படுத்தியுள்ளோம்; விரைவில் நிரந்தரம் ஆக்குவோம். சிறிய பணிதான் இது; பெரிய மாற்றத்துக்குத் தொடக்கமும் கூட, என்று குறிப்பிட்டு இருந்தார். அதாவது மெரினாவில் அவ்வப்போது தற்காலிகமாக அமைக்கப்படும் இந்த பாதை விரைவில் நிரந்தரம் ஆக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார்.

பாதை
அதன்படியே இதை நிரந்தரமாக்க.உத்தரவிடப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக தீவிரமாக நடந்து வந்தது. மொத்தம் 263 மீட்டர் தூரத்திற்கு இந்த பாதை நிரந்தரமாக அமைக்க பணிகள் நடந்தது. கடந்த முறை தற்காலிகமாக geosynthetic மெட்டீரியல் மூலம் இந்த பாதை அமைக்கப்பட்டது. இந்த geosynthetic மெட்டீரியல் பாதை அமைக்க 30 லட்சம் மட்டுமே செலவாகும். ஈரத்தில் இந்த பாதை வீணாகாது என்பதால் இப்படி அமைக்கப்பட்டது.ஆனால் ஈரமாக இருக்கும் போது இதில் வீல் சேர் ஓட்ட முடியாது. வீல் சேரில் வழுக்கும். இதனால் கடும் சிக்கல் ஏற்படும். இதனால் geosynthetic மெட்டீரியலுக்கு பதிலாக வேறு வகையான மர பாதை அமைக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வைத்தனர் .

மர பாதை
மர பாதை அமைக்க 1.15 கோடி ரூபாய் செலவு ஆகும். இருந்தாலும் மரப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. விரைவில் இதற்கான பணிகள் நடந்து வந்தன. இதையடுத்து சில வாரங்களுக்கு முன் இந்த பாதை திறக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் பலர் இந்த பாதையை பார்வையிட்டனர். மக்கள் இடையே இந்த பாதை பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் சென்னையில் தாக்கிய மாண்டஸ் புயலின் போது இந்த பாதையின் இறுதியில் இருக்கும் பார்வையிடும் பகுதி சேதம் அடைந்தது. கடல் ஆக்ரோஷமாக இருந்ததால் ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக அந்த பார்வையிடும் பகுதி மட்டும் சேதம் அடைந்தது.

பார்வையிடும் பகுதி
கடல் ஆக்ரோஷமாக இருந்ததால் ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பார்வையிடும் பகுதியை புனரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பாதையில் உள்ள பார்வை மேடை இனிமேல் சேதம் அடையாமல் இருக்க தமிழ்நாடு அரசு புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது. அதன்படி இந்த பார்வை மேடையை கழற்றி மாற்றும் வகையில் தற்காலிகமாக அமைக்க உள்ளனர். ஒவ்வொரு வருடமும் மழை காலத்தில் இதை கழற்றி மாற்றவும், புயலுக்கு முன்பாக கழற்றி மாற்றவும் முடிவு செய்துள்ளனர். என்னதான் இங்கு வலுவான மர கட்டுமானம் மேற்கொண்டாலும், அது உடைந்துவிடும் என்பதால் இந்த முறை தற்காலிகமாக அமைக்க முடிவு செய்துள்ளனர்.அதாவது இந்த பார்வை மேடை மட்டும் தற்காலிகமாக அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
திமுக போட்டியிடும் தொகுதிகள் எவ்வளவு.. கூட்டணி கட்சிகளுக்காக ஸ்டாலின் எடுக்கும் ரிஸ்க் -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
சட்டசபை தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியில்லை? திருக்கோவிலூர் தொகுதியில் மகனுக்கு சீட் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
என்னை முதல்வராக்கினால்! பெண்களுக்கு ரூ 1 லட்சம்! ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ பேச்சால் கோபத்தில் தலைமை -
திமுக - சிபிஎம் இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தானது.. 5 இடங்கள் ஒதுக்கீடு! முடிவுக்கு வந்தது நீண்ட இழுபறி -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
"6 தொகுதிகளிலும் ஜெயித்திருப்போம்!" 2021 தேர்தல் குறித்து சிபிஎம் பெ.சண்முகம் அதிரடி விளக்கம்!












Click it and Unblock the Notifications