பட்டா, நில ஆவணங்கள் காணாமல் போகுதா? இனி அலுவலர்களே பொறுப்பு! தமிழக வருவாய்த்துறைக்கு முக்கிய உத்தரவு
சென்னை: தமிழகத்தில் வருவாய்த் துறை அலுவலகங்களில் பட்டா உள்ளிட்ட நில உடைமை ஆவணக் கோப்புகள் காணாமல் போனால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய் துறை செயலாளருக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பட்டா உள்ளிட்ட நில உடைமை ஆவண கோப்புகள் காணாமல் போனால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மாநில தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கோவையைச் சேர்ந்த பா.அன்புவேல் என்பவர், தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள மாநில தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

ஆவணங்கள் மாயம்
அந்த மனுவில், பேரூர் வட்டம், வடவள்ளி கிராமத்திலுள்ள நிலம் தொடர்பாக கோவை மாவட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் உள்ள கோப்பினை, பார்வையிட அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் ரா.பிரியகுமார் மனுதாரர் கோரிய தகவல்கள் அடங்கிய கோப்பு, தேடிப் பார்த்ததில் கிடைக்கவில்லை என்று தகவல் அலுவலர் சொல்லியிருக்கிறார்.. இதனை இந்த ஆணையம் ஏற்க மறுக்கிறது.. கோப்பு கிடைக்கப் பெறவில்லை என்று பொது அதிகார அமைப்பு தெரிவிக்கும் பதில் அவர்களின் அலட்சிய போக்கையும், கவனக்குறைவையும் பிரதிபலிக்கக்கூடியதாக உள்ளது..
ஆவணங்கள் நகல்
ஒரு மாத காலத்திற்குள் வருவாய் கோட்டாட்சியர், கோரிய கோப்பினை மீண்டும் தேடி கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொண்டு, கிடைக்கப் பெற்றால் அதன் நகலினை மனுதாரருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.. அவ்வாறு கிடைக்காவிட்டால் அதற்கான விசாரணையை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்..
தமிழக அரசின் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசு செயலாளர், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் கடிதம் வாயிலாக, அனைத்து மாவட்டங்களிலும் வருவாய்த் துறையின் கீழ் உள்ள அனைத்து நிலை அலுவலகங்களிலும் ஆவணங்களை முறையாக பராமரிக்கப்படுவது தொடர்பான நடைமுறைகளை பிறப்பித்து, அதனை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும்.
கோப்புகள் மீள் உருவாக்கம்
கோப்புகள் காணாமல் போனால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்... கோப்பு கிடைக்கப் பெறவில்லையானால், கோப்பினை மீள உருவாக்க நேரிடும் (Reconstruction offiles) என்பதை அறிவுறுத்தியும், கோப்புகள் அழிக்கப்படும் போது பின்பற்றுவதற்கான நடைமுறைகளின் அவசியத்தை அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும்.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமிருந்து அறிக்கையை பெற்று, அவற்றை இணைத்து ஒருங்கிணைந்த அறிக்கையாக நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
அலுவலர்கள் மீது நடவடிக்கை
மனுதாரர்கள் தகவல்கள் கோரும் கோப்பு கிடைக்கப்பெறாத பட்சத்தில், அது குறித்து சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்து, அதன் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை மற்றும் அதனை தொடர்ந்து ( Non Traceable Certificate) ஆகியவற்றை பெற்று கோப்பில் பராமரிக்கப்பட வேண்டும்..
மேற்படி நில உடைமை ஆவணங்கள் அனைத்தும் சம்மந்தப்பட்ட அலுவலக பதிவறையில் பராமரிக்கப்பட வேண்டிய நிரந்தர ஆவணங்களாகும். அதனை பெறுப்புடன் பாதுகாக்க வேண்டியது, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வருவாய் துறை சம்மந்தப்பட்ட அலுவலகத்தைச் சார்ந்த அதிகாரிகள் அலுவலர்களின் கடமையாகும்.
மேற்கண்ட உத்தரவுகளை குறித்த காலத்திற்குள் நிறைவேற்ற தவறினால், தகவல் பெறும் உரிமைச் சட்டம், கீழ் ரூ.25,000 அபராதம் விதிக்கவும், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் மற்றும் மேல்முறையீட்டு இழப்பீடு வழங்குதல் போன்ற தண்டனை நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கவும் நேரிடும்,.. அத்துடன் சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் ஏற்படும்" " என்று உத்தரவிட்டுள்ள ஆணைய உறுப்பினர் பிரிய குமார், இந்த வழக்கின் விசாரணை வரும் செப்டம்பர் 30-ம் தேதி ஒத்திவைத்துள்ளார்.
வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசு செயலாளருக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது மிகப்பெரிய கவனத்தை பெற்று வருகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications