அமெரிக்காவிற்கு நேர்ந்த அதே "ஜப்பான் சம்பவம்".. உக்ரைன் வேலையால் ரஷ்யா கையில் எடுக்கும் அணு குண்டு?
மாஸ்கோ: அமெரிக்காவில் நடந்த ஜப்பானின் பேர்ல் ஹார்பர் தாக்குதலுக்கு இணையான தாக்குதலை ரஷ்யா மீது உக்ரைன் மேற்கொண்டு உள்ளது.
பேர்ல் ஹார்பர் மீதான தாக்குதல் உலக போர் அரங்கில் மறக்க முடியாத சம்பவம். உலகில் நாடுகள் போர் செய்யும் முறையை மாற்ற காரணமாக அமைந்த சம்பவம். அதாவது அணு ஆயுத போர் நடப்பதற்கான அடித்தளத்தை விதைத்த சம்பவம்.
இது டிசம்பர் 7, 1941 அன்று ஹவாயின் ஓஹுவில் உள்ள பேர்ல் ஹார்பரில் உள்ள அமெரிக்க பசிபிக் கடற்படைத் தளத்தின் மீது ஜப்பான் பேரரசு நடத்திய ஒரு எதிர்பாராத இராணுவத் தாக்குதலாகும். அந்த நேரத்தில், அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் நடுநிலை நாடாக இருந்தது
டிசம்பர் 7, 1941 அன்று ஹவாயின் பேர்ல் ஹார்பரில் உள்ள அமெரிக்க பசிபிக் கடற்படையின் மீது ஜப்பான் திடீர் தாக்குதலைத் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 3,500 க்கும் மேற்பட்ட அமெரிக்க துருப்புக்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அமெரிக்க கடற்படை கடுமையாக சேதமடைந்தது; மேலும் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தத் தாக்குதலால் அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் நுழைந்தது, மறுநாள் ஜப்பான் மீது போரை அறிவித்தது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானுக்கு எதிரணியில் கைகோர்த்து போரில் களமிறங்கியது.

இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவும் ஜப்பானும் பசிபிக் பெருங்கடலில் கொடூரமான போரை நடத்தின, இரு தரப்பிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. ஜப்பான் சரணடைய மறுத்ததால், அமெரிக்கா ஜப்பானின் மீது நிலப் படையெடுப்புக்குத் தயாரானது, இது மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 4 வருடங்கள் இந்த போர் தீவிரமாக நடந்தது. இதையடுத்து ஹிரோஷிமா & நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. ஜப்பானின் தாக்குதலுக்கு பதிலடியாக ஹிரோஷிமா & நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இது போரை முடிவிற்கு கொண்டு வந்தது. அதோடு உலக அளவில் போர் செய்யும் முறையையும் மொத்தமாக இந்த தாக்குதல் மாற்றியது.
இணையான தாக்குதல்
அமெரிக்காவில் நடந்த ஜப்பானின் பேர்ல் ஹார்பர் தாக்குதலுக்கு இணையான தாக்குதலை ரஷ்யா மீது உக்ரைன் மேற்கொண்டு உள்ளது. ரஷ்யாவில் உக்ரைன் நடத்திய திட்டமிட்ட டிரோன் தாக்குதல் காரணமாக 41 ரஷ்ய போர் விமானங்கள் அழிக்கப்பட்டு உள்ளது. ரஷ்யா - உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்புகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
ரஷ்யா உக்ரைன் போர் உச்சம் அடைந்து உள்ளது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான போர் ஒப்பந்தங்கள், அமைதி பேச்சுவார்த்தைகள் எதுவும் பயனளிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் உக்ரைன் நாட்டின் டிரோன்கள் ரஷ்யா மீது நேற்று இரவு கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டது. இதில் ரஷ்யாவின் 41 போர் விமானங்கள் அழிக்கப்பட்டது. முக்கியமாக ரஷ்யாவின் குண்டு போடும் போர் விமானங்களான Tu-95 மற்றும் Tu-22 அழிக்கப்பட்டது. உக்ரைன் மீது குண்டுகளை வீச ரஷ்யா இந்த போர் விமானங்களை பயன்படுத்தி வந்தது.
மர்மன்ஸ்க், இர்குட்ஸ்க், இவானோவோ, ரியாசான் மற்றும் அமுர் பகுதிகளில் உள்ள ரஷ்ய இராணுவ விமானநிலையங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது. மர்மன்ஸ்க் மற்றும் இர்குட்ஸ்கில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தவிர, நாட்டின் அனைத்து இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை முறியடித்துவிட்டதாக ரஷ்யா கூறி உள்ளது.
சிறிய ரக சூசைட் டிரோன்களை கருப்பு உள்ளிட்ட நிறங்களில் பெயிண்ட் செய்து, மிக தாழ்வாக ரேடாரில் படாமல் பறக்கவிட்டு, போர் விமானங்கள் ஹேங்கரில் இருக்கும் போது அருகில் சென்று அதை தாக்கி அழித்து உள்ளது உக்ரைன். சிறிய ரக டிரோன்கள் என்பதால் இதனால் மொத்தமாக போர் விமானங்களை அழிக்க முடியாது.
ஆனால் இவை சூசைட் டிரோன்கள். நேராக போர் விமானங்கள் மீது விழுந்து வெடித்து விமானங்களை தீ பிடிக்க வைக்கும். அப்படித்தான் இந்த தாக்குதல்களை உக்ரைன் நடத்தி உள்ளது. இதனால் இரண்டு நாட்டு போர் அடுத்த கட்டத்திற்கு சென்று உள்ளது. போர் கடுமையான நிலையை அடைந்து உள்ளது. இதற்கு பதிலடி தர ரஷ்யா மிக கடுமையான முடிவுகளை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது உக்ரைனுக்கு பதிலடி கொடுக்க ரஷ்யா அடுத்த எந்த கட்டத்திற்கும் செல்லும் என்றும் கூறப்படுகிறது. அதாவது ரஷ்யா அணு ஆயுதத்தை கையில் எடுக்கலாம்.. அமெரிக்கா ஜப்பானுக்கு எதிராக அணு ஆயுதத்தை கையில் எடுத்தது போல ரஷ்யாவும் உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதத்தை எடுக்கும் அபாயம் உருவாகி உள்ளது.
-
கண்கள் சிவந்த டிரம்ப்.. திடீரென சீனா பக்கம் திரும்பி நேரடி வார்னிங்.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க












Click it and Unblock the Notifications