ஒரே நாளில் இப்படி ஒரு மாற்றம்.. தாம்பரம் மாநகராட்சி அசத்தல்.. திகைத்து போன மக்கள்
சென்னை: தாம்பரம் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழை நீரை இரவோடு இரவாக அப்புறப்படுத்தி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்கள் தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளது
வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னையில் மட்டுமின்றி, நேற்று சென்னையின் புறநகர் பகுதியான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், அனகாபுத்தூர், செம்பாக்கம், சேலையூர், பெருங்களத்தூர், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நேற்று முழுவதும் கனமழை பெய்தது.

இதன் காரணமாக தாம்பரம் பகுதியில் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கி குளம் போல் காணப்பட்டது. மழை நீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் ஊர்ந்தபடியே நேற்று முழுவதும் சென்றன.
தாம்பரம் அடுத்த சேலையூர் கேம்ப் ரோடு பகுதியில் வேளச்சேரி சாலையில் சுமார் 2 அடி உயரத்துக்கு மழை நீர் தேங்கி உள்ளது. தாம்பரம் மாநகராட்சியின் தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்ற மழைநீரை மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் மூலமாக அகற்றினார்கள்.
இதேபோல் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதை முழுவதும் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சுரங்கப்பாதையை கடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.
தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் மின் மோட்டார் மூலம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நின்ற மழைநீரை வெளியேற்றினார்கள். அதன்பிறகு சுரங்கப்பாதையில் போக்குவரத்து சீரானது. இதனிடையே குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் தேங்கிய மழை நீரால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்,
சென்னையை ஒட்டிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. புழல், ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருநின்றவூர், கோவில்பதாகை, நெமிலிச்சேரி, முத்தாபுதுப்பேட்டை, மிட்டனமல்லி, பாக்கம், பருத்திப்பட்டு, அயப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஆவடி காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்குள் மழைநீர் புகுந்ததால் போலீசார் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர். இதேபோல் மீனம்பாக்கம் பகுதியில் கனமழை காரணாமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
-
ரயிலில் மிடில் பர்த்தில் எப்போது தூங்க வேண்டும் தெரியுமா? ரயில்வே விளக்கம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications