வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்து தமிழகம் வருவோருக்கு பழைய முறைப்படிதான் இ-பாஸ்.. அரசு விளக்கம்
சென்னை: வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வருவோர் முன்பு போலவே இ பாஸ் பெற வேண்டியது கட்டாயம் என்று தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
மாவட்டங்களிடையே பயணிக்கும் மக்கள் அனைவருக்கும் விண்ணப்பித்ததும் இ பாஸ் வழங்கப்படும் என்றும், இந்த தளர்வு 17ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அரசு அறிவித்தது. இந்த நிலையில், வெளி மாநிலம், வெளி நாடுகளிலிருந்து தமிழகம் வருவோருக்கான விதிமுறையையும் விளக்கியுள்ளது அரசு.

அரசு செய்திக்குறிப்பில் கூறியுள்ள தகவல் இதுதான்:
பொதுமக்கள், முக்கிய பணிகளுக்கு, தடையின்றி தமிழ்நாடு முழுக்க பயணிக்க, (மாவட்டங்களுக்கு இடையே) 17ஆம் தேதி முதல் ஆதார் அட்டை அல்லது குடும்ப அட்டை விபரங்களுடன் தொலைபேசி அல்லது அலைபேசி எண்ணுடம் விண்ணப்பித்தால் இ பாஸ் எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்குடன் விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க இன்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
எனினும், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வர தற்போதுள்ள இ பாஸ் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும். இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பதற்கு தமிழகத்தில் வசிக்ககூடியவர்களுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதே தவிர, பிற மாநிலங்களில் இருந்து வருவோருக்கு அதே மாதிரி பாஸ் நடைமுறை தொடரும். இதன் மூலம், உரிய காரணம் இன்றி எளிதாக யாரும் தமிழகத்திற்குள் வரமுடியாதபடி பார்த்துக் கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications