சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தொடர் மழையை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை... அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேட்டி

Google Oneindia Tamil News

Recommended Video

    மக்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் ஆர்பி உதயகுமார்

    சென்னை: மழையை கண்டு மக்கள் அச்சப்படும் நிலை தற்போது இல்லை என அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள அடுத்த இருதினங்களுக்கு தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துளளது.

    இந்நிலையில் தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் நடவடிக்கைககள் குறித்து வருவாய் துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

    கனமழை எதிரொலி.. நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்புகனமழை எதிரொலி.. நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

    நிலைமை கட்டுக்குள்

    நிலைமை கட்டுக்குள்

    அப்போது அவர் கூறும் போது, தமிழகத்தில் தொடர் மழையை கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை. 37 வருவாய் மாவட்டங்களிலும் நிலைமை கட்டுக்குள் உள்ளது. மழையால் பாதிக்கப்படும் 4,399 இடங்களில் மண்டலக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை ஓரளவு தான் தமிழகத்தில் மழை பெய்யும் என கூறியுள்ளது.

    சராசரி மழைதான்

    சராசரி மழைதான்

    வடகிழக்கு பருவமழையைப் பொறுத்தவரையில் இன்னும் போதிய அளவு மழை பெய்யவில்லை. கடலோர மாவட்டங்களில் சராசரி அளவை விட அதிகமாக மழை பெய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இயல்பைவிட அதிக அளவு மழை பெய்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இயல்பான அளவு மழை பெய்துள்ளது.

    முகாம்களில்

    முகாம்களில்

    கடலூர் மாவட்டத்தில் தாழ்வான 4 இடங்களில் இருந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். நெல்லை மாவட்டத்தில் தாழ்வான 2 இடங்களில் இருந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்

    நவீன உபகரணங்கள்

    நவீன உபகரணங்கள்

    தமிழகத்தில் மாவட்டந்தோறும் பேரிடர் மீட்பு வீரர்கள் எப்போதும் தயார் நிலையில் உள்ளார்கள். தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கு சேட்டிலைட் போன்கள் மற்றும் நவீன உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது.

    English summary
    minister rb udhayakumar said tamilnadu people don't worry while seeing continuous heavy rai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X