செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு.. அபாயத்தை உணராமல் கரைகளில் செல்பி எடுத்த மக்கள்!.. விரட்டிய போலீஸ்
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்தவுடன் ஆபத்தை உணராமல் ஏராளமானோர் செல்பி எடுத்ததை அடுத்து அவர்களை போலீஸார் விரட்டினர். நீர் திறப்பை பார்வையிட சாரை சாரையாக மக்கள் படையெடுத்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Recommended Video
சென்னைக்கு நீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியில் நிவர் புயலுக்கு முன்பே நீர் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நிவர் புயலால் நேற்று முதல் சென்னையில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 21.55 அடியை தாண்டியது. இதன் முழு கொள்ளளவான 24 அடியை விரைவில் எட்டும் என்பதால் ஏரியைத் திறக்க பொதுப் பணித் துறை அதிகாரிகள் அறிவித்தனர்.

பொதுப் பணித் துறை
ஏரியின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாலும் பொதுப் பணித் துறை அறிவிப்பாலும் செம்பரம்பாக்கம் ஏரியை பார்வையிட ஏராளமான மக்கள் வந்தனர். இதனால் அங்கிருந்த போலீஸார் அவர்களை விரட்டி அடித்தனர். எனினும் ஆபத்தை உணராமல் குழந்தை, குட்டிகளுடன் மக்கள் படையெடுத்த வண்ணம் இருந்தனர்.

மதகுகள்
இந்த நிலையில் நண்பகல் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது. வினாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டவுடன் மதகுகளில் அழகாக பாய்ந்தோடியது. ஏரிக்குள் அழுத்தத்தால் அழுந்திக் கொண்டிருந்த தண்ணீர் திறக்கப்பட்டவுடன் ரம்மியமாக பாய்ந்தது.

மக்கள் குவிப்பு
இந்த ஏரி திறப்பை லைவாக பார்வையிடவும் மக்கள் குவிந்தனர். அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தும் பணியில் இருந்தனர். எனினும் போலீஸாரின் தடையை மீறி சைக்கிள் கேப்புகளில் எப்படியோ நுழைந்த மக்கள் செம்பரம்பாக்கம் வந்தனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

செல்பி
அனுமதியின்றி வந்ததோடு அங்கு நின்று கொண்டு செல்பி எடுத்த வண்ணம் இருந்தனர். இதுகுறித்து அங்கு வந்தவர்கள் கூறுகையில் 2015-க்கு பிறகு தற்போதுதான் ஏரி நிரம்பி தண்ணீர் திறக்கிறார்கள். அதை பார்வையிட வந்தோம். இதெல்லாம் பார்ப்பது ஜாலியாக இருக்கிறது என்கிறார்கள். செம்பரம்பாக்கம் அருகே வசிப்பவர்கள் சில கரைகளில் இறங்கி ஆர்ப்பரித்து ஓடும் தண்ணீருடன் நின்று செல்பி எடுத்தனர். வீடியோ எடுத்தனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications