அழுகிய மனசு.. இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் சாத்தானின் பிள்ளைகளா? சீமானை விளாசிய பீட்டர் அல்போன்ஸ்
சென்னை: இஸ்லாமியர்களையும், கிறித்தவர்களையும் சாத்தானின் பிள்ளைகள் என சீமான் அழைப்பது அரசியல் அநாகரிகத்தின் உச்சம் என தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், "திரு.சீமான் அவர்கள் தமிழக இஸ்லாமியர்களையும், கிறித்தவர்களையும் "சாத்தானின் பிள்ளைகள்" என்றழைப்பது அரசியல் அநாகரிகத்தின் உச்சம்.மக்கள் தொகையில் சிறுபான்மையினராக இருப்பதால் அவர்களைப்பற்றி எப்படி வேண்டுமானாலும் பேசலாம், என நினைப்பது ஒரு அழுகிய மனதின் அவலம்! அரசு கவனிக்க வேண்டும்!" என்றார்.

மணிப்பூரில் குகி பழங்குடியின பெண்களுக்கு எதிராக கடந்த மே மாதத்தில் இருந்து அரங்கேற்றப்பட்டு வரும் கொடூர தாக்குதல்களை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டிலும் பல்வேறு இயக்கங்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அதில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "இஸ்லாத்தையும் கிறிஸ்துவத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று நாம் நினைத்து வருகிறோம்.
ஆனால், அவை சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் கடந்துவிட்டன. தேவாலயத்தில் தேவரே வாரீர் வாரீர் என்று பாடிவிட்டு, இறுதியில் யார் யாருக்கோ நாட்டை கொடுத்து இருக்கிறார்கள். இந்த நாட்டில் நடைபெறும் அநீதிகளுக்கும் அக்கிரமங்களுக்கும் பெரிய பொறுப்பேற்க வேண்டியதே இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும்தான்.
தொடர்ச்சியாக பல ஆண்டுகள் திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் 18 விழுக்காடு வாக்குகளை போட்டு போட்டு இந்த நாட்டை தெருவில் போட்டவர்கள் இவர்கள்தான்." என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில், "சாத்தானின் பிள்ளைகள் என்ற கடுமையான, அருவருப்பான வார்த்தையை கிறிஸ்தவர்களுக்கு முஸ்லிம்களுக்கும் எதிராக பயன்படுத்தி உள்ள சீமான் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். முன்பு தாய் மதத்திற்கு திரும்புங்கள் என சங்கப்பரிவார் தொண்டர் போல் பேசியவர் சீமான்.
தற்போதைய அவரது சிறுபான்மை வெறுப்பு பரப்புரை மூலம் தன்னை வெளிப்படையாகவே அம்பலப்படுத்தி கொண்டுள்ளார். இத்தகைய வேடதாரிகளிடம் தமிழக மக்கள் எச்சரிகையாகவே இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்." என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications