15ஆவது நாளாக இன்றும் சென்னையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு.. இதுவரை பெட்ரோல் விலை ரூ.7 உயர்வு!
சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து 15ஆவது நாளாக உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கொரோனா வைரஸ் காரணமாக பெட்ரோல், டீசல் விலை கடந்த மார்ச் மாதத்தில் எந்த மாற்றம் இல்லாமல் அப்படியே இருந்தது. இந்த நிலையில் கடந்த இரு வாரங்களாக வாகன போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தினர்.
இன்று 15ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 பைசா உயர்ந்து 82.58 பைசாவாகவும் டீசல் விலை லிட்டருக்கு 51 பைசா உயர்ந்து ரூ 75.80 ஆகவும் விற்கப்படுகிறது.
சென்னை, கோவை, வேலூரில் தெரியும் சூரிய கிரகணம்.. எதை செய்யலாம்? எதை செய்யக் கூடாது?
கடந்த 15 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 7.04 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7.58 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.