வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்?
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் போர், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் முக்கிய வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, இந்தியாவின் எரிபொருள் இருப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், இந்தியாவின் அவசரகால எரிபொருள் இருப்பை உடனடியாக ஆய்வு செய்யவும், புதிய கொள்முதல் வழிகளைக் கண்டறியவும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தற்போது ஒரு அதிரடியான உயர் மட்டத் தனிக்குழுவை (Task Force) அமைத்து உத்தரவிட்டுள்ளது.

எரிபொருள் இருப்பு எவ்வளவு? அதிர்ச்சி தரும் நிஜமான கணக்கு!
இந்தியப் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அமைத்துள்ள இந்த புதிய தனிக்குழு, நாட்டின் தற்போதைய கச்சா எண்ணெய், எல்பிஜி (LPG) சமையல் எரிவாயு மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் அவசரகாலச் சேமிப்பு நிலைகளை முழுமையாக ஆய்வு செய்யவுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, போர் பதற்றங்களுக்கு மத்தியிலும் இந்தியாவிடம் 60 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இருப்பு உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாமானிய மக்களின் அன்றாடத் தேவையைப் பாதிக்கும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் நோக்கில், அரசு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தங்களிடம் குறைந்தது 30 நாட்களுக்குத் தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பை எப்போதும் வைத்திருக்க வேண்டும் என மத்திய அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அவசரகால எரிபொருள் சேமிப்பு
இருப்பினும், இந்தியாவின் உண்மையான மூலோபாய அவசரகால எரிபொருள் சேமிப்பு (Strategic Petroleum Reserves) என்பது வெறும் 8 நாட்களுக்கு மட்டுமே போதுமானது என்ற கசப்பான உண்மையை வர்த்தகத் தரவுகள் காட்டுகின்றன.
இந்தியா ஒரு நாளுக்கு சுமார் 5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயைப் பயன்படுத்துகிறது. இந்தியப் பாதுகாப்புப் பெட்ரோலியச் சேமிப்பு நிறுவனம் (ISPRL) முதற்கட்டமாக விசாகப்பட்டினம், மங்களூரு மற்றும் பாடூர் ஆகிய மூன்று இடங்களில் ஒட்டுமொத்தமாக 5.33 மில்லியன் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட அவசரகாலச் சேமிப்புக் கிடங்குகளை அமைத்துள்ளது.
கச்சா எண்ணெய் கணக்கீட்டின்படி, ஒரு மெட்ரிக் டன் என்பது 7.33 பேரல்களுக்குச் சமம் என்பதால், இந்தச் சேமிப்பு முழுவதும் வெறும் 39 மில்லியன் பேரல்கள் மட்டுமே ஆகும். இது நாட்டின் 8 நாட்களுக்கான நுகர்வுக்கு மட்டுமே போதுமானது.
அரசு குறிப்பிடும் மீதமுள்ள 60 நாட்களுக்கான இருப்பு என்பது, எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் குழாய்களில் தேங்கியிருக்கும் பெட்ரோல், டீசல் போன்ற சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களின் ஒட்டுமொத்தக் கணக்காகும்.
டீசலுக்கு ரூ.30.. சிலிண்டருக்கு ரூ.690.. நஷ்டம்!
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள போதிலும், இந்திய நுகர்வோரின் சுமையைக் குறைக்க உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை அரசு முழுமையாக உயர்த்தாமல் கட்டுக்குள் வைத்துள்ளது. இதன் காரணமாக, இந்தியப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தற்போது மிகப்பெரிய நிதியிழப்பைச் சந்தித்து வருகின்றன.
தற்போதைய கள நிலவரப்படி, எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு லிட்டர் டீசலுக்குச் சுமார் 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையிலும், ஒரு சமையல் எரிவாயு சிலிண்டருக்குச் சுமார் 690 ரூபாயும் அசுர நஷ்டம் (Under-recovery) ஏற்பட்டு வருவதாக அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நஷ்டத்தைத் தாங்கிக் கொண்டு, நாட்டின் பாதுகாப்பிற்காக இந்தியா தற்போது உலகெங்கிலும் உள்ள சுமார் 40 நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயைத் தொடர்ந்து இறக்குமதி செய்து வருவதுடன், மாற்று வழிகளையும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
முடங்கிக் கிடக்கும் புதிய மெகா திட்டங்கள்
இந்தியாவில் எதிர்கால கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதமே பொது-தனியார் கூட்டுப் பங்களிப்பு (PPP Mode) மூலமாகச் சண்டிகோல் மற்றும் பாடூர் ஆகிய இடங்களில் கூடுதலாக 6.5 மில்லியன் மெட்ரிக் டன் நிலத்தடிச் சேமிப்புக் கிடங்குகளை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது.
இதில் சண்டிகோல் பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்தாலும், கடந்த மூன்று ஆண்டுகளாக பட்ஜெட் திருத்த மதிப்பீட்டு (RE) நிலைகளில் நிதி ஒதுக்கீடு தொடர்ந்து குறைக்கப்பட்டதால் இந்தத் திட்டங்கள் மிகப்பெரிய காலதாமதத்தைச் சந்தித்து வருவதாக நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தத் முட்டுக்கட்டைகளை உடைப்பதற்காகவே தற்போது புதிய தனிக்குழு களமிறக்கப்பட்டுள்ளது. இந்த உயர் மட்டக் குழு நாட்டின் எரிபொருள் தேவை மற்றும் கொள்முதல் குறித்த முழுமையான பரிந்துரை அறிக்கையை அடுத்த 6 முதல் 8 வாரங்களுக்குள் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கவுள்ளது.
-
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
வெடித்து சிதறிய இரும்பு குழம்பு.. 8 தொழிலாளர்கள் மரணம்.. விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பயங்கரம்! -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications