இரவு 2 மணி.. நீண்ட வரிசை.. சென்னை வீதியில் ஒரு ‘பெட்ரோல்’ யுத்தம்! கதிகலங்க வைக்கும் நேரடி அனுபவம்
சென்னை: "சார், தயவுசெஞ்சு லைன்ல வாங்க.. முன்னாடி வண்டி நகந்தப்புறம் போலாம்" - இந்த வார்த்தையை கேட்டு எத்தனை நாளாச்சு? கிட்டத்தட்ட 5 வருஷத்துக்கு முன்னாடி, கொரோனா லாக்டவுன் சமயத்துல மளிகை கடை வாசல்லயும், மெடிக்கல் ஷாப் வாசல்லயும் கேட்ட அதே குரல். ஆனா, இந்த தடவை இது கேட்டது ரேஷன் கடையில இல்ல.. ஒரு பெட்ரோல் பங்க்-ல.. பெட்ரோல் பங்குகளில் என்னதான் நிலைமை.. ஒரு பர்சனல் அனுபவம்!
நேற்று நள்ளிரவு சுமார் 2 மணி இருக்கும். வழக்கமாக இந்த நேரத்தில் சென்னை சாலைகள் நிசப்தமாக இருக்கும். ஆனால், பெட்ரோல் பங்க் பக்கம் வண்டியைத் திருப்பியபோது எனக்கு ஒரு நிமிடம் 'சுருக்'கென்றது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை வண்டிகளின் நீண்ட வரிசை.

பகலில் கூட்டம் இருப்பதைப் பார்த்திருக்கிறேன், ஆனால் நள்ளிரவு 2 மணிக்கு ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்பது, ஏதோ ஒரு பெரிய ஆபத்து நம்மை நெருங்கிவிட்டதோ என்ற 'சில்'லென்ற உணர்வைத் தருகிறது.
அந்த பழைய 'கொரோனா' ஞாபகங்கள்
வரிசையில் காத்திருந்த அந்த ஒரு மணி நேரமும் என் மனது 2020-21 லாக்டவுன் நாட்களுக்கே சென்றது. அப்போது எப்படி பால் பாக்கெட்டுக்கும், மருந்துக்கும் அதிகாலையிலேயே வரிசையில் நின்று 'நாளைக்கு உலகம் எப்படி இருக்குமோ?' என்ற ஒருவித 'Doom' ஃபீலிங்கில் (உலகமே முடியப்போகிறது என்ற பயம்) அலைந்தோமோ, அதே போன்ற ஒரு சூழலை நேற்று உணர முடிந்தது.
சுற்றி நின்றவர்களின் முகங்களில் ஒருவிதமான இறுக்கம். யாரிடமும் பேச்சில்லை. ஈரான் போர் பற்றிய செய்திகளும், வாட்ஸ்அப்பில் வரும் வதந்திகளும் சேர்ந்து, நம்மை அறியாமலேயே ஒரு 'பேனிக்' (Panic) நிலைக்குத் தள்ளிவிட்டன.
நிஜமான தட்டுப்பாடா? அல்லது பயமா?
அரசாங்கம் "50 நாட்களுக்குத் தேவையான பெட்ரோல் இருப்பு இருக்கிறது" என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும், தரைமட்டத்தில் நிலைமை வேறாக இருக்கிறது. கமர்ஷியல் LPG சிலிண்டர்களுக்கு ஏற்கனவே கடும் தட்டுப்பாடு நிலவுவது தெரிந்த விஷயம்தான். நயினார் என்னவோ நானே டீலர்தான்.. கேஸ் தட்டுப்பாடு இல்லை என்கிறார்.. ஆனால் அவரின் கோடோனிலேயே கேஸ் இல்லையாம்.. இன்னொரு பக்கம், பெட்ரோல் மற்றும் டீசலைப் பொறுத்தவரை, 'ஸ்டாக் தீர்ந்துவிடுமோ' என்ற பயத்தினால் மக்கள் செய்யும் 'Panic Buying' தான் இந்த நீண்ட வரிசைகளுக்கு முக்கியக் காரணம்.
லாக்டவுன் சமயத்தில் எப்படி அத்தியாவசியப் பொருட்களை அள்ளிச் சேமித்தோமோ, அதே மனநிலை இப்போது பெட்ரோல் விஷயத்திலும் வந்திருக்கிறது. டேங்க் காலியாக இல்லாவிட்டாலும், 'முன்னெச்சரிக்கை' என்ற பெயரில் அனைவரும் நள்ளிரவிலும் பங்க்குகளை முற்றுகையிடுவது ஒரு செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கிவிடுமோ என்ற அச்சம் எழுகிறது.
ஒரு சாமானியனின் கேள்வி
அந்த ஒரு மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு பெட்ரோல் போட்டுவிட்டு, நிசப்தமான சாலையில் திரும்பும்போது எனக்குள் ஒரு கேள்விதான் ஓடிக்கொண்டிருந்தது. போர் எங்கோ நடக்கிறது, ஆனால் அதன் பாதிப்பு நம் தெருக்கோடி பெட்ரோல் பங்க் வரை வந்துவிட்டது.
மீண்டும் ஒரு முடக்கம் அல்லது எரிபொருள் இல்லாத ஒரு சூழல் ஏற்பட்டுவிடுமோ என்ற பயம். பெட்ரோல் இல்லைன்னா.. சரக்கு வாகனம் இருக்காது.. சரக்கு லாரி போகலைன்னா.. காய்கறி, அத்தியாவசிய பொருட்கள் இருக்காது.. அப்போ சாப்பாடு? இந்த கேள்விதான் அந்த நள்ளிரவு குளிரையும் மீறி நம்மை வாட்டுகிறது. ஒரு சாமானியனாக, அடுத்த வாரம் பெட்ரோல் விலை என்னவாகும், சப்ளை சீராக இருக்குமா என்ற கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் தான் இன்றும் பலரைப்போல நானும் உறங்கச் சென்றேன்.
-
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
ஈரான் பக்கம், ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 3,00000 டன் இந்திய எல்பிஜி! பரபரக்கும் மத்திய அரசு -
ஈரானுக்கு ஆதரவாக உள்ளே வரும் சீனா.. மிக பெரிய ட்விஸ்ட் கொடுத்த ஜின்பிங்.. அடுத்து என்ன நடக்கும்? -
கண்ணை உறுத்துது டிரம்புக்கு..ஈரானின் இதயத்தை குறி வைக்கும் அமெரிக்கா! கார்க் தீவு மட்டும் பறிபோனால்? -
ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்கும் அமெரிக்கா? டிரம்பிற்கு போன USCIRF ரிப்போர்ட்.. ஏன் முக்கியம்? -
விஷயம் ரொம்ப தீவிரமாகுது! டிரம்ப் பேச்சை கேட்டு.. ஈரான் மேட்டரில் நுழையும் பிரிட்டன்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
இந்தியா செய்த மேஜிக்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க 2 கப்பல்களுக்கு மட்டும் அனுமதி எப்படி? ஜெய்சங்கர் பகிர்ந்த சீக்ரெட் -
ஒழுங்கா கப்பலை அனுப்புங்க.. இல்லனா மாட்டிப்போம்! - நேட்டோ நாடுகளிடம் கெஞ்சிய ட்ரம்ப்.. என்ன நடந்தது? -
விட மாட்டோம்..தேடிப் போய் ’சம்பவம்’ செய்வோம்! குழந்தைகளை கொ*ற குற்றவாளி! ஈரான் ராணுவம் எடுத்த சபதம்! -
உலக போரை இழுத்துவிடும் டிரம்ப்? ஐரோப்பிய நாடுகளுக்கு தந்த வார்னிங்.. 'நேட்டோ' பற்றி சர்ச்சை கருத்து -
ஈரான் போர் உச்சத்துல இருக்கு.. ஆனாலும் இந்தியாவில் தங்கம் விலை பெருசா உயரல! காரணம் இதுதான்!












Click it and Unblock the Notifications