5 மாநில சட்டசபைத் தேர்தல் : பெட்ரோல் டீசல் விலை உயர்வு இப்போதைக்கு இல்லை
சென்னை: பெட்ரோல், டீசல் விலையில் பத்தாவது நாளாக எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் பெட்ரோல், லிட்டர் 93.11 ரூபாய், டீசல் லிட்டர் 86.45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பொதுத் துறையைச் சேர்ந்த, பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன.

நாடு முழுதும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.
ஜூன் மாதம் முதலிலிருந்து உயரத் தொடங்கிய பெட்ரோல், டீசல் விலை பிப்ரவரி மாதத்தில் உச்சத்தை எட்டியது. இந்தியாவின் சில மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயைக் கடந்தது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றன. போராட்டங்களை நடத்தி வருகின்றன. நாடாளுமன்றத்திலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலித்தது.
5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து கடந்த 10 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த வித மாற்றமும் இன்றி விற்பனையாகிறது. சென்னையில் பெட்ரோல், லிட்டர் 93.11 ரூபாய், டீசல் லிட்டர் 86.45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
புதுச்சேரியிலும் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றம் இல்லாமல் உள்ளது. இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் விலை 91.34 ரூபாயாகவும், டீசல் விலை ஒரு லிட்டர் 84.80 ரூபாயகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை இன்று 91.17 ரூபாயாகவும் டீசல் விலை 81.47 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திரா பெட்ரோல் விலை இன்று 87.24 ரூபாயாகவும் டீசல் விலை 80.21 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications