ஒரு மாதத்திற்கும் மேலாக.. இன்றும் உயராத பெட்ரோல், டீசல் விலை.. தற்போதைய நிலவரம் என்ன?!
சென்னை: பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் எந்த ஏற்றம்மும் செய்யப்படவில்லை. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் ஏற்றப்படாமல் உள்ளது.
தொடர்ந்து கடந்த 34 நாட்களாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த ஏற்றமும் செய்யப்படவில்லை. மாறாக இடையில் இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலை தலா 60 பைசா குறைக்கப்பட்டது. பெட்ரோல் டீசல் விலையை தனியார் நிறுவனங்கள் ஏற்றிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்த நிலையில் தினமும் பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்தது.

100 ரூபாயை தொடும் அளவிற்கு பெட்ரோல், டீசல் விலை சென்றது. இந்த நிலையில் ஐந்து மாநில தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் திடீரென இந்த விலை உயர்வு நிறுத்தப்பட்டது. 5 மாநில சட்டசபை தேர்தல் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. மேற்கு வங்கம்,அசாமில் முதல் இரண்டு கட்ட தேர்தல் முடிந்த நிலையில் நாளை தமிழகம், கேரளாவில் தேர்தல் நடக்கிறது.
இந்த சட்டசபை தேர்தலை முன்னிட்டு பெட்ரோல் டீசல் விலையில் ஏற்றம் செய்யப்படவில்லை.
சென்னையில் பெட்ரோல் விலை 91 33 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 85.49 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.டெல்லியில் பெட்ரோல் விலை 95.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 80.49 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஹைதராபாத்தில் பெட்ரோல் விலை 85.40ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 84.49 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பெங்களூரில் பெட்ரோல் விலை 93.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 86.49 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை 96.59 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 87.56 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அதே சமயம் இது தேர்தலுக்காக எடுக்கப்பட்ட முடிவு இல்லை, பெட்ரோல், டீசல் விலை வருகிற நாட்களில் கண்டிப்பாக குறையும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்












Click it and Unblock the Notifications