பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்கிறது.. புதுவையில் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
சென்னை: தமிழகத்தின் அருகில் உள்ள புதுவையில் வாட் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் வருகிற 1 ந்தேதி முதல் பெட்ரோல், டீசல் ரூ.2 வீதம் அதிகரிக்கிறது. பெட்ரோல் டீசல் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுவையில் வாட் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் வருகிற 1 ந்தேதி முதல் பெட்ரோல், டீசல் ரூ.2 வீதம் அதிகரிக்கிறது. புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் பல்வேறு பொருட்களுக்கு தமிழகத்தை விட வரி குறைவாக உள்ளது. இதனால் பொருட்களின் விலையையும் தமிழகத்துடன் ஒப்பிடும் போது குறைவாக இருக்கும். அந்த வகையில் பெட் ரோல், டீசலும் தமிழகத்துடன் ஒப்பிடும் போது ஒரு லிட்டருக்கு ரூ.8 ரூபாய் வரை குறைவாக உள்ளது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு
தமிழகத்தில் தற்போது பெட்ரோல் ஒரு லிட்டர் 101.3 ரூபாய்க்கு, டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 92.61க்கும் விற்பனையாகிறது. புதுவையில் வாட் வரி குறைவாக வசூலிக்கப்படுகிறது. தற்போது பெட்ரோலுக்கு வாட் வரி 14.54 சதவீதமும், காரைக்காலில் 14.55 சதவீதமும் வசூலிக்கப்படுகிறது. இதனால் புதுவையில் தற்போது பெட்ரோல் ரூபாய் 94.26 க்கும் டீசல் ரூபாய் 84.48 க்கும் விறபனையாகிறது.
இந்த நிலையில், அரசின் வரி வருவாயை பெருக்கும் விதமாக புதுவையில் வாட் வரியை உயர்த்த புதுவை அரசு முடிவு செய்தது. இதற்கான கோப்புக்கு துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக தற்போது வாட் உரி உயர்த்தப்பட்டு அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி பார்த்தால் புதுவையில் பெட் ரோலுக்கான வாட் வரி 16.98 சதவீதமாகவும், காரைக்காலில் 16.99 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ.2 வரை விலை உயருகிறது
அதேபோல, டீசலுக்கான வாட் வரி 11.22 சதவீதமாகவும் காரைக்காலில் 11.23 சதவீதமாகவும் உயர்கிறது. இதேபோல் மாகி, ஏனாம் பிராந்தியங்களிலும் வாட் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு உடனடியக அமலுக்கு வரவில்லை எனவும் புத்தாண்டு முதல் அதாவது, ஜனவரி மாதம் 1 ந்தேதி முதல் அமலுக்கு வர உள்ளது என தெரிவிகப்பட்டுள்ளது. இந்த வாட் வரி உயர்வு மூலம் புதுவையில்,பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.1.25 முதல் ரூ.2 வரை விலை உயருகிறது.
புதுவையில் தற்போது பெட்ரோல் ரூ.94.26, காரைக்காலில் ரூ.94.03 எனவும், டீசல் புதுவையில் 84.48, காரைக்காலில் ரூ.84.35 எனவும் விற்பனை செய்யப்படுகிறது. தொலைவுக்கு ஏற்ப ஒவ்வொரு பெட்ரோல் பங்குகளிலும் 5 முதல் 10 காசுகள் வரை வித்தியாசம் இருக்கும். விலை உயர்வால், புதுவை அரசுக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி வரை கூடுதல் வருமானம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
புதுவையில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருக்கும் காரணத்தால், புதுவை எல்லையை ஒட்டிய வாகன ஓட்டிகள், அங்கு சென்று பெட் ரோல், டீசல் போடுவதை பார்க்க முடியும். அதேபோல, வாடகைக்கு செல்லும் லாரிகளும் புதுவையில் டீசல்களை நிரப்பி வருவார்கள். தற்போது, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு இருப்பது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இது கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என மக்கள் கூறி வருகிறார்கள். டீசல், பெட்ரோல் விலை ரூ.2 வீதம் உயர்த்தப்பட்டாலும் தமிழகம் உள்ளிட்ட இதர மாநிலங்களை விட புதுவையில் குறைவுதான் என்பது கவனிக்கத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications