பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்கிறது.. புதுவையில் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
சென்னை: தமிழகத்தின் அருகில் உள்ள புதுவையில் வாட் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் வருகிற 1 ந்தேதி முதல் பெட்ரோல், டீசல் ரூ.2 வீதம் அதிகரிக்கிறது. பெட்ரோல் டீசல் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுவையில் வாட் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் வருகிற 1 ந்தேதி முதல் பெட்ரோல், டீசல் ரூ.2 வீதம் அதிகரிக்கிறது. புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் பல்வேறு பொருட்களுக்கு தமிழகத்தை விட வரி குறைவாக உள்ளது. இதனால் பொருட்களின் விலையையும் தமிழகத்துடன் ஒப்பிடும் போது குறைவாக இருக்கும். அந்த வகையில் பெட் ரோல், டீசலும் தமிழகத்துடன் ஒப்பிடும் போது ஒரு லிட்டருக்கு ரூ.8 ரூபாய் வரை குறைவாக உள்ளது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு
தமிழகத்தில் தற்போது பெட்ரோல் ஒரு லிட்டர் 101.3 ரூபாய்க்கு, டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 92.61க்கும் விற்பனையாகிறது. புதுவையில் வாட் வரி குறைவாக வசூலிக்கப்படுகிறது. தற்போது பெட்ரோலுக்கு வாட் வரி 14.54 சதவீதமும், காரைக்காலில் 14.55 சதவீதமும் வசூலிக்கப்படுகிறது. இதனால் புதுவையில் தற்போது பெட்ரோல் ரூபாய் 94.26 க்கும் டீசல் ரூபாய் 84.48 க்கும் விறபனையாகிறது.
இந்த நிலையில், அரசின் வரி வருவாயை பெருக்கும் விதமாக புதுவையில் வாட் வரியை உயர்த்த புதுவை அரசு முடிவு செய்தது. இதற்கான கோப்புக்கு துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக தற்போது வாட் உரி உயர்த்தப்பட்டு அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி பார்த்தால் புதுவையில் பெட் ரோலுக்கான வாட் வரி 16.98 சதவீதமாகவும், காரைக்காலில் 16.99 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ.2 வரை விலை உயருகிறது
அதேபோல, டீசலுக்கான வாட் வரி 11.22 சதவீதமாகவும் காரைக்காலில் 11.23 சதவீதமாகவும் உயர்கிறது. இதேபோல் மாகி, ஏனாம் பிராந்தியங்களிலும் வாட் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு உடனடியக அமலுக்கு வரவில்லை எனவும் புத்தாண்டு முதல் அதாவது, ஜனவரி மாதம் 1 ந்தேதி முதல் அமலுக்கு வர உள்ளது என தெரிவிகப்பட்டுள்ளது. இந்த வாட் வரி உயர்வு மூலம் புதுவையில்,பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.1.25 முதல் ரூ.2 வரை விலை உயருகிறது.
புதுவையில் தற்போது பெட்ரோல் ரூ.94.26, காரைக்காலில் ரூ.94.03 எனவும், டீசல் புதுவையில் 84.48, காரைக்காலில் ரூ.84.35 எனவும் விற்பனை செய்யப்படுகிறது. தொலைவுக்கு ஏற்ப ஒவ்வொரு பெட்ரோல் பங்குகளிலும் 5 முதல் 10 காசுகள் வரை வித்தியாசம் இருக்கும். விலை உயர்வால், புதுவை அரசுக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி வரை கூடுதல் வருமானம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
புதுவையில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருக்கும் காரணத்தால், புதுவை எல்லையை ஒட்டிய வாகன ஓட்டிகள், அங்கு சென்று பெட் ரோல், டீசல் போடுவதை பார்க்க முடியும். அதேபோல, வாடகைக்கு செல்லும் லாரிகளும் புதுவையில் டீசல்களை நிரப்பி வருவார்கள். தற்போது, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு இருப்பது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இது கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என மக்கள் கூறி வருகிறார்கள். டீசல், பெட்ரோல் விலை ரூ.2 வீதம் உயர்த்தப்பட்டாலும் தமிழகம் உள்ளிட்ட இதர மாநிலங்களை விட புதுவையில் குறைவுதான் என்பது கவனிக்கத்தக்கது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications