பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு இபிஎஃப்ஓ மகிழ்ச்சியான செய்தி.. ஏப்ரலில் வரும் புதிய ஆஃப்
சென்னை: தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பிஎஃப் பணம் தொடர்பாக அதன் சந்தாதாரா்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. இதன்படி இபிஎஃப்ஓவில் உறுப்பினர்களாக உள்ளவர்கள், அவசர தேவைக்கு பிஎஃப் பணத்தை எடுப்பது எளிதாகிறது. அவர்களுக்காகவே, யுபிஐ பணப் பரிவா்த்தனை மூலம் நேரடியாகத் தங்களின் வங்கி கணக்குகளுக்கே பெற்றுக்கொள்ளும் புதிய வசதியை ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டு வருகிறது. இதன்படி யுபிஐ மூலம் பிஎஃப் பணம் எடுக்கும் வசதியுடன் கூடிய புதிய செயலி அறிமுகம் ஆகிறது.
இப்போது பிஎஃப் சந்தாதாரா்கள் பணம் எடுக்க வேண்டுமானால், 'யுஏஎன்' வலைதளம் அல்லது 'உமாங்' செயலி வாயிலாக விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும். இந்த முறையில் பணம் கையில் வந்து சேர அதிக காலம் எடுத்துக்கொள்கிறது. 20 நாட்கள் குறைந்தது ஆகிறது. வெகுசிலருக்கே தானியங்கி முறையில் 3 நாள்களில் பணம் வழங்கப்படுகிறது.

தாமதம் ஏன்
இதற்கான வரம்பு அண்மையில்தான் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயா்த்தப்பட்டிருக்கிறது. சுமாா் 8 கோடி உறுப்பினா்களைக் கொண்ட இபிஎஃப்ஓ அமைப்புக்கு, ஆண்டுக்கு 5 கோடிக்கும் அதிகமான கோரிக்கைகள் வருவதால் பணிச்சுமை அதிகமாகி, தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
யுபிஐ வசதி
இந்தப் பணிச்சுமையைக் குறைக்கவும், வங்கிகள் வழங்கும் அதிவேக சேவைக்கு இணையாக பிஎஃப் சேவையை மாற்றவும் இந்த யுபிஐ வசதி தற்போது அறிமுகம் ஆக உள்ளது. சந்தாதாரா்களின் பிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகை மட்டும் நீண்ட கால சேமிப்புக்காக முடக்கப்பட உள்ளது. மீதமுள்ள தொகையை, வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட யுபிஐ மூலம் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளும் வசதி ஏப்ரல் முதல் வருகிறது.
ரகசிய குறியீட்டு எண்
சந்தாதாரர்கள் யு.பி.ஐ. மூலம் தங்கள் பணத்தை வங்கிக்கணக்குக்கு மாற்றிக்கொள்ள முடியும். அதேபோல் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படும் விகிதம் ஆகியவற்றையும் இந்த செயலி மூலம் அறிந்து கொள்ள முடியும் . இந்த பரிவர்த்தனை அனைத்தும் பாதுகாப்பாக முடிப்பதற்காக வாடிக்கையாளர்கள் தங்கள் ரகசிய யு.பி.ஐ. குறியீட்டு எண்ணை (பின்) பயன்படுத்திக்கொள்ள வழிவகையும் செய்யப்பட்டிருக்கிறது.
வங்கி போல் பயன்படுத்த முடியாது
இந்தப் புதிய செயலி மூலம் பணம் எடுப்பது மட்டுமின்றி, வங்கிச் செயலிகளைப் போலவே உங்கள் கணக்கில் உள்ள இருப்புத்தொகையைச் சரிபாா்ப்பது உள்ளிட்ட மற்ற சேவைகளை நீங்கள் பெறலாம். எனினும் இபிஎஃப்ஓ அமைப்பு வங்கி உரிமம் பெறாத காரணத்தால் நேரடியாக பணத்தை வழங்க முடியாது.எனவே பயனாளா்களின் வங்கி கணக்குகள் மூலம் இந்த யுபிஐ பரிவா்த்தனை செயல்படுத்தப்பட உள்ளது.
100 மாதிரி கணக்குகள்
இந்தப் புதிய சேவையில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏதும் ஏற்படாமல் இருக்க, தற்போது 100 மாதிரி கணக்குகளைக் கொண்டு இபிஎஃப்ஓ தீவிரமாகச் சோதனை செய்து வருகிறது. இந்தச் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தவுடன், வரும் ஏப்ரல் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications