அனைத்து கொரோனா தடுப்பூசி மையங்களிலும்.. மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை.. தமிழக அரசு சபாஷ் உத்தரவு
சென்னை: தமிழகத்திலுள்ள அனைத்து கொரோனா தடுப்பூசி மையங்களிலும் மாற்றித் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் 2ஆம் அலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மாநிலத்தில் வரும் மே 24ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமும் இன்றி தடுப்பூசிகளை போட்டுட்டுக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், "அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பெறுவதற்குத் தனியாக ஒரு பிரிவு தோற்றுவிக்கப்பட வேண்டும்.
அனைத்து தடுப்பூசி மையங்களிலும் பொது வரிசை அல்லது மாற்றுத் திறனாளிகளுக்கான தனி வரிசை ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வு தளம் அமைக்கப்பட வேண்டும்.

தேவைக்கேற்ப மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைத்துச் செயல்படுத்தப்பட வேண்டும்" என அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவின் மூலம் மாற்றுத்திறனாளிகள் சிரமின்றி தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
18+ அனைவருக்கும் தடுப்பூசிகளைச் செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ள போதும், தட்டுப்பாட்டுக் காரணமாகத் தமிழ்நாட்டில் தற்போது 45+ கடந்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications