சென்னை மக்களே நோட் பண்ணுங்க.. நாளை முதல் 2 நாள் 20 ஏரியாவில் குடிநீர் விநியோகம் ரத்து - CMWSSB
சென்னை: சென்னையில் நாளை (நவம்பர் 20) மற்றும் நாளை மறுநாள் (நவம்பர் 21) ஆகிய 2 நாட்கள் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் உள்ளிட்ட மண்டலங்களில் இருக்கும் 20 முக்கிய இடங்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படாது என்று சென்னை மெட்ரோபாலிட்டன் குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சென்னை மெட்ரோபாலிட்டன் குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம் (CMWSSB) சார்பில் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சில சமயங்களில் பராமரிப்பு பணி, பவர் கட் உள்ளிட்ட விஷயங்களால் இந்த குடிநீர் விநியோகம் என்பது பாதிக்கப்படும். அந்த வகையில் நாளை காலை முதல் நாளை மறுநாள் காலை வரை 20 ஏரியாக்களில் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்பட உள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோபாலிட்டன் குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛சென்னை உத்தமர் காந்தி ரோடு மற்றும் சேமியர்ஸ் சாலை இடையே சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் பைப்லைன் இணைப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக சென்னை வள்ளுவர் கோட்டம் குடிநீர் வினியோக மையம் 24 மணிநேரம் செயல்படாது.
இதன் காரணமாக தேனாம்பேட்டை (மண்டலம் 9), கோடம்பாக்கம் (மண்டலம் 10), அடையார் (மண்டலம் 13) உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் 20 முக்கிய இடங்களில் நவம்பர் 20 (நாளை), நவம்பர் 21 (நாளை மறுநாள்) என 2 நாட்கள் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட உள்ளது.
அதன்படி தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார், சூளைமேடு,நுங்கம்பாக்கம், சேத்துப்பேட்டை, ஆயிரம் விளக்கும், ராயப்பேட்டை, கோபாலபுரம், ஆழ்வார்பேட்டை, நந்தனம், மேற்கு மாம்பலம், மேற்கு சிஐடி நகர், சைதாப்பேட்டையின் சில பகுதிகள், அசோக் நகர், டி நகர், வடபழனி உள்ளிட்ட இடங்களில் நவம்பர் 20ம் தேதி (நாளை) காலை 6 மணி முதல் நவ்பம்ர 21ம் தேதி காலை 6 மணி வரை குடிநீர் வினியோகம் செய்யப்படாது.
இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான குடிநீரை முன்னெச்சரிக்கையாக சேமித்து வைத்து கொள்ள வேண்டும். ஒருவேளை அவசர தேவைகள் இருப்பின் டேங்கர்கள் மூலம் குடிநீர் பெற்று கொள்ளலாம். டேங்கரை சென்னை மெட்ரோபாலிட்டர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் இணையதளமான https://cmwssb.tn.gov.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் ஏதாவது விபரங்கள் தேவை என்றால் 044 - 4567 4567 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications