Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடி வீட்டிற்கே நேராக சென்ற பியூஷ் கோயல்.. சற்று நேரத்தில் வெளியாகும் மிக முக்கிய அறிவிப்பு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே இன்னும் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்குச் சென்றுள்ளார். அங்கு பாஜக தலைவர்களுக்கு எடப்பாடி காலை விருந்தளிக்கிறார். இதில் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு உட்பட 5 மாநிலச் சட்டசபைத் தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் 2, 3 வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்குவதால் அதற்கான நடவடிக்கைகளில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன. குறிப்பாக ஆளும் திமுகவுக்கு எதிராக வலிமையான ஒரு கூட்டணியை அமைக்கும் முனைப்பில் அதிமுக- பாஜக இருக்கிறது.

Tamil Nadu Assembly Election 2026 Edappadi Palanisamy BJP

கூட்டணி

அதிமுக பாஜக கூட்டணி கடந்தாண்டே உறுதி செய்யப்பட்ட நிலையில், மற்ற கட்சிகளையும் கூட்டணிக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டன. முதலில் அன்புமணி இந்த கூட்டணியில் இணைவதாகக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தார். தொடர்ந்து பாரிவேந்தர் தலைமையிலான ஐஜேகே கட்சியும் கூட்டணியில் இணைந்தது.

டிடிவி தினகரன்

இதற்கிடையே தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணியில் முக்கியமான கட்சி இணையவுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் அறிவித்தார். இன்னும் ஓரிரு நாட்களில் முக்கிய கட்சி இணையும் என்று பழனிசாமி அறிவித்திருந்தார். அப்போதே டிடிவி தினகரன் தான் மீண்டும் என்டிஏ கூட்டணியில் சேரப் போவதாகச் சொல்லப்பட்டது. அதை நேற்று டிடிவி தினகரன் உறுதி செய்தார். தமிழ்நாட்டில் மீண்டும் ஜெயலலிதாவின் நல்லாட்சியைக் கொடுக்க பழைய கசப்புகளைத் தாண்டி கூட்டணியை அமைத்துள்ளதாக டிடிவி தினகரன் கூறியிருந்தார்.

நாளைய தினம் மதுராந்தகத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்து என்டிஏ கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் மேடை ஏற்ற பாஜக முடிவு செய்துள்ளது. இதன் காரணமாகவே அடுத்தடுத்து கூட்டணிகள் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளைக் கவனிக்கவே மத்திய அமைச்சரும் பாஜக மேலிடத் தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தமிழ்நாடு வந்துள்ளார். அவர் வந்த பிறகே என்டிஏ கூட்டணியில் அமமுக வருவதை டிடிவி தினகரன் உறுதி செய்தார்.

எடப்பாடி பழனிசாமி இல்லம்

இதற்கிடையே இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பியூஷ் கோயல் சென்றார். 3 நாள் பயணமாகத் தமிழ்நாடு வந்துள்ள பியூஷ் கோயல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார். அவர் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு நேரில் சென்றார். அங்கு அவருக்கு எடப்பாடி பழனிசாமி காலை விருந்து அளிக்கிறார். மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் உள்ளிட்டோரும் உடன் சென்றனர்..

முக்கிய ஆலோசனை

கூட்டணி இறுதியாகவிட்ட நிலையில், தொகுதிப் பங்கீடு குறித்து இந்த சந்திப்பில் ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு குறித்த தகவல்கள் வெளியாகலாம் என கூறப்படுகிறது. அமமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கும் சேர்ந்தே பாஜக இடங்களைப் பெறும் எனச் சொல்லப்படும் நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மேலும், பிரதமர் மோடி நிகழ்ச்சி நாளை நடக்கும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிப்பார்கள் எனத் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+