வேண்டாம் ஹைட்ரோ கார்பன்.. காவிரி டெல்டா பாலைவனம் ஆவதை தடுத்து நிறுத்துங்க.. ஸ்டாலின்
சென்னை: காவிரி டெல்டா மண்டலம் பாலைவனம் ஆவதை தடுக்க, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனம், அமெரிக்க நிறுவனம், ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஆகிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.
காவிரி டெல்டா பகுதியில் 6 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய அரசு இந்த நிறுவனங்களுடன் கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஓ.என்.ஜி.சி.
வேதாந்தா நிறுவனத்திற்கு 274 கிணறுகளும், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு 67 கிணறுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கின்ற நேரத்தில் இதுபோன்ற திட்டங்களுக்கு அனுமதி கொடுப்பது தேர்தல் விதிமுறை மீறல்.

கிணறுகள் தோண்ட
ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்ட அனுமதி கொடுத்து விட்டு, மக்களிடம் கருத்து கேளுங்கள் என்று ஒப்புக்காக ஒரு வெற்று நிபந்தனையை, மத்திய அரசு விதித்துள்ளது.

தேர்தல் ஆணையம்
மத்தியில் புதிய அரசு அமையும் வரை, ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்.மத்திய அரசு நிறுத்தி வைக்காவிட்டால், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையமே நேரடியாகத் தலையிட்டு, அனுமதியை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

டெல்டா பாலைவனம்
காவிலி டெல்டா மண்டலம் பாலைவனம் ஆவதைத் தடுக்க, இது தொடர்பாக, தமிழ்நாடு அரசே, தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு உடனடியாக கடிதம் எழுதி, நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications