பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் மே 14ஆம் தேதி வெளியாகும்.. அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 14ஆம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 4 முதல் மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,302 தேர்வு மையங்களில் 8.25 லட்சம் பேர் எழுதினர். இதில் 7,534 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 20,207 மாணவர்கள், 5,000 தனித் தேர்வர்கள் மற்றும் 187 சிறை கைதிகளும் அடங்குவர்.

Plus 1 public exam results will be declared on May 14

ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை பிளஸ் 1 பொதுத்தேர்வு மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணிகள் நடைபெற்றது. இதையடுத்து, மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில், திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 14ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன.

மேல்நிலை முதலாம் ஆண்டு (பிளஸ் 1) தேர்வு எழுதிய தேர்வர்களின் முடிவுகள் வரும் மே 14 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் வெளியிடப்பட உள்ளது என அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி வெளியிடப்பட்டன. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 94.56 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதைத்தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று (மே 10) வெளியிடப்பட்டன. அதன்படி, 91.55% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் 14ஆம் தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+