பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் மே 14ஆம் தேதி வெளியாகும்.. அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!
சென்னை: பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 14ஆம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 4 முதல் மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,302 தேர்வு மையங்களில் 8.25 லட்சம் பேர் எழுதினர். இதில் 7,534 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 20,207 மாணவர்கள், 5,000 தனித் தேர்வர்கள் மற்றும் 187 சிறை கைதிகளும் அடங்குவர்.

ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை பிளஸ் 1 பொதுத்தேர்வு மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணிகள் நடைபெற்றது. இதையடுத்து, மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில், திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 14ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன.
மேல்நிலை முதலாம் ஆண்டு (பிளஸ் 1) தேர்வு எழுதிய தேர்வர்களின் முடிவுகள் வரும் மே 14 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் வெளியிடப்பட உள்ளது என அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி வெளியிடப்பட்டன. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 94.56 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதைத்தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று (மே 10) வெளியிடப்பட்டன. அதன்படி, 91.55% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் 14ஆம் தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications