ஜூன் 27 இல் வெளியாகிறது தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள்!
தமிழகத்தில் கடந்த மே மாதம் பிளஸ் 1 தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 8 லட்சத்து 69 ஆயிரம் மாணவர்களும், புதுச்சேரி பள்ளிகளை சேர்ந்த 15 ஆயிரத்து 145 மாணவர்களும் தேர்வு எழுதினர். இவர்கள் தவிர பிளஸ் 1 தேர்வை தனித் தேர்வர்களாக 5 ஆயிரத்து 673 மாணவ, மாணவியரும் எழுதினர். மாற்றுத்திறனாளிகள் 5 ஆயிரத்து 290, சிறைவாசிகள் 99 பேரும் எழுதினர்.

பிளஸ் 1 தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்காக 3119 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. தனித் தேர்வர்களுக்காக 115 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இதுதவிர சிறைத் தேர்வு மையங்கள் 9 அமைக்கப்பட்டன. பிளஸ் 1 தேர்வு அறை கண்காணிப்பு பணியில் 47315 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பறக்கும் படை 3,050 உருவாக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த தேர்வுக்கான முடிவுகள் வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது. இந்த தேர்வு முடிவுகளை
www.tnresults.nic.in, www.deg.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகளை பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications