பிளஸ் 2 துணைத் தோ்வு.. மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு! தெரிந்து கொள்வது எப்படி?
சென்னை: தமிழகத்தில் கடந்த ஜூன், ஜூலையில் பிளஸ் 2 வகுப்புகளுக்கான துணைத் தோ்வு நடந்தது. இந்நிலையில் இந்த தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகியிருந்தன. இதில் மறுகூட்டலுக்கு சிலர் விண்ணப்பித்திருந்தனர். இந்த மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.
மறுகூட்டல் முடிவுகளை தேர்வு துறையின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இது குறித்து பள்ளி கல்வித்துறை இயக்குநரகம் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

"தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான துணைத் தோ்வு கடந்த ஜூன்-ஜூலையில் நடைபெற்றது. இந்த தோ்வு எழுதியவா்களில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவா்களில் மதிப்பெண் மாற்றமுள்ள மாணவா்களின் பதிவெண் பட்டியல் புதன்கிழமை பிற்பகலில் வெளியிடப்படவுள்ளது. அதன் விவரங்களை மாணவா்கள் தோ்வுத் துறையின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இந்தப் பட்டியலில் இடம்பெறாதவா்களின் விடைத்தாள்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றமுள்ள மாணவா்கள் மட்டுமே மேற்கண்ட தோ்வுத் துறை இணையதளத்தில் இருந்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி விவரங்கள் பின்னா் வெளியிடப்படும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications