அண்ணாமலைக்கு விபரீத ராஜயோகம்.. குபேர ஜாதகம்.. 2038ல் பிரதமர் வேட்பாளர்.. உறுதியாக சொல்லும் ஜோதிடர்
சென்னை: பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ஜாதகப்படி அவருக்கு மத்திய அமைச்சராகும் யோகம் உள்ளது என்றும் பிரதமர் வேட்பாளராகும் தகுதி 99 சதவிகிதம் உள்ளது என்றும் ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளார்.
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ராசி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம். சிம்ம லக்னம். அவர் கடந்த ஓராண்டு காலமாகவே பேசும் வார்த்தைகளை கவனித்தாலே தெரியும். கூட்டணி கட்சியினரை பற்றி மட்டுமல்லாது ஆளும் கட்சியை பற்றி பேசியும் வழக்கு விவகாரங்களில் சிக்கியுள்ளார். அண்ணாமலை பேசும் வார்த்தைகள் எல்லாமே ஏதாவது ஒரு பிரச்சினையில்தான் முடிகிறது.

இந்த நிலையில் 2024ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல்வாதிகளுக்கு எப்படி இருக்கிறது என்று ஜோதிடர்கள் கணித்து கூறியுள்ளனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எப்படி இருக்கிறது என்று ஜோதிடர் ஒருவர் கணித்து கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் தாமரையை மலர வைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார் அண்ணாமலை. தற்போது தமிழ்நாடு முழுவதும் நடை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த ஆண்டு மே மாதம் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில்தான் அண்ணாமலை லோக்சபா தேர்தலில் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அரசியல்வாதிகளின் ஜாதகம் பற்றி கணித்து கூறி வரும் ஜோதிடர்கள் பலரும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஜாதகத்தை கணித்துள்ளனர்.
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு அஷ்டம சனி இரண்டரை ஆண்டுகள் நடைபெறும். 2026ஆம் ஆண்டு வரைக்கும் அஷ்டம சனிதான். 2026ஆம் ஆண்டுக்குப் பிறகு சனி 9, 10,11ஆம் இடங்களில் நடைபெறும். அண்ணாமலைக்கும் அஷ்டம சனிதான் தற்போது நடைபெற உள்ளது.
இன்னும் பத்து ஆண்டுகளில் அண்ணாமலையின் அரசியல்வாழ்க்கை உச்சத்திற்கு செல்லப்போகிறது என்று கணித்துள்ளனர் ஜோதிடர்கள். அவரது ஜாதகத்தில் விபரீத ராஜயோகம் உள்ளது. அது எப்போது யாரை உயர்த்தி விடும் என்று தெரியாது. அண்ணாமலையின் ஜாதகம் குபேர ஜாதகம் என்பதால் எல்லாம் வெற்றிகரமாக நடைபெறும்.
ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து பிரபலமானவர். அரசியலில் நுழைந்த உடன் பாஜக மாநில தலைவர் பதவி கிடைத்தது. இரண்டரை ஆண்டுகளில் புகழ் பெற்றுள்ளார் என்றும் அந்த ஜோதிடர் கணித்துள்ளார். அதே நேரத்தில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையோ, 2024 மட்டுமல்ல 2038 வரைக்குமே மோடிதான் பிரதமர் என்று கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, 2024ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் மோடிக்கான தேர்தல். மோடியை விட பிரதமர் வேட்பாளருக்கான தகுதி யாருக்கும் இல்லை என்று கூறியுள்ளார். தமிழகத்தில் அப்படி யாருக்காவது இருப்பதாக கூறினால் மக்கள் சிரிப்பார்கள். இந்த தேர்தலில் யாரெல்லாம் மோடியை ஏற்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைப்போம். தமிழ்நாட்டில் எங்கு போட்டியிட்டாலும் மோடி அதிக வாக்குகளில் வெற்றி பெறுவோர். 2024 மட்டுமல்ல 2038 வரை மோடிதான் பிரதமர் என்றும் கூறியுள்ளார் அண்ணாமலை.
-
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
தமிழ்நாட்டில் எம்.பி சீட் 39-லிருந்து 59 ஆக உயரும்.. எண்ணிக்கை குறையாது.. - அண்ணாமலை சொன்ன தகவல் -
“கட்சியால் புறக்கணிக்கப்பட்டவர்”.. கரூர் ரோபோக்கள் என விமர்சித்த அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி -
முத்துராமலிங்கத் தேவரின் மறு உருவம் அண்ணாமலையா.. செல்லூர் ராஜு பேச்சால் கொந்தளித்த மாணிக்கம் தாகூர்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள்












Click it and Unblock the Notifications