விவசாயிகளுக்கு நற்செய்தி.. மாதம் ரூ.3000 பென்ஷன் வேணுமா? பி.எம்.கிசான் மந்தன் யோஜனா இருக்கே.. சபாஷ்
சென்னை: விவசாயிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் பென்ஷன் திட்டம் குறித்து தெரியுமா? வருடதுக்கு ஓய்வூதியமாக வழங்கப்படும் தொகை எவ்வளவு? தெரியுமா?
விவசாயிகளின் நன்மைக்காகவும், அவர்களின் வளமான வாழ்வுக்காகவும் மத்திய அரசு எத்தனையோ சலுகைகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. எனினும், விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது.. எதிர்காலத்தில் எந்த வருமானமும் இன்றி தவிக்கும் சூழலுக்கும் ஆளாகிவிடுகிறார்கள்.

கிசான் மந்தன் யோஜனா: அதனால்தான், இதற்கும் ஒரு தீர்வை தந்துள்ளது மத்திய அரசு.. விவசாயிகளின் நிலைமையை கருத்தில் கொண்டு, சிறு மற்றும் குறு விவசாயிகளின் எதிர்கால தேவைகளையும் புரிந்து கொண்டு, இதற்கு ஓரளவிற்கு நிவர்த்தி செய்யும் விதமாக மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தான் பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா.
இந்த திட்டத்தில், மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும்.. மாதம் 3000 ஆயிரம் என்றால், வருடத்துக்கு 36000 ரூபாய்... இந்த பென்ஷனை பெற வேண்டும் என்றால், குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும்.
பிரீமியம் தொகை: இந்த திட்டத்தில், 18 வயதில் சேர்ந்தால் ரூ.55 பிரீமியம் தொகையும், 30 வயதில் சேர்ந்தால் ரூ.110, 40 வயதில் சேர்ந்தால் ரூ.200 என பிரீமியமும் செலுத்த வேண்டும்.
ஆனால், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தில் சேர முடியாது. அதேபோல, 2 ஹக்டேர் அதாவது 5 ஏக்கர் வரை நிலம் வைத்து விவசாயம் பார்க்கும் விவசாயிகள், உள்பட 18 வயது முதல் 40 வயதில் உள்ள எல்லாருமே இந்த பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா திட்டத்தில் இணையலாம்..
இதற்கு விவசாயிகள் தங்களது 60 வயது வரை பிரீமியம் செலுத்த வேண்டும். 60 வருடம் நிறைவடைந்த பிறகு, மத்திய அரசிடம் இருந்து மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் பெறப்படும்.. ஓய்வூதியம் பெறும் விவசாயி இறந்துவிட்டால், அரசு 50 சதவீத குடும்ப ஓய்வூதியத்தை அவரது மனைவிக்கு வழங்குகிறது.. மனைவிக்கு ஓய்வூதியம் வேண்டாம் என்றால், அதுவரை செலுத்திய தொகையை வட்டியுடன் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
பாலிசி: அதாவது, வாழ்க்கை துணைவர் 50% குடும்ப ஓய்வூதியத்தை பெற்றால், மனைவி இறந்தவுடன் நாமினி பணம் பெறுவார். பாலிசியின்போது விவசாயி இறந்தால், மீதமுள்ள பிரீமியத்தை செலுத்தி அவரது மனைவி ஓய்வூதியம் பெறலாம். அதேபோல, சில வருடங்கள் பிரீமியம் கட்டியபிறகு, இந்த திட்டத்திலிருந்து வெளியே வந்துவிட்டால், செலுத்திய முழுத்தொகையையும் வட்டியுடன் சேர்த்து அரசு திருப்பி தந்துவிடும்.
உங்களுக்கு அருகிலிருக்கும் பொது சேவை மையத்திற்கு சென்று, பி.எம் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.. இதற்கு, ஆதார் அட்டை, வங்கி பாஸ்புக் உள்ளிட்ட நகல்களை கட்டாயம் தேவை.. வருமான சான்றிதழ், நில உரிமையை உறுதி செய்யும் பட்டா, வயது சான்றிதழ் போன்ற ஆவணங்களையும் கைகளில் வைத்து கொள்ள வேண்டும்.
சான்றிதழ்கள்: அதேபோல, ஒவ்வொரு கிராமத்திலும் தொழில் முனைவோருக்கான ஆரம்ப பங்களிப்பு தொகை பணமாக வழங்கப்படுவதற்கான சான்றிதழ்களையும் வைத்திருப்பது அவசியம்..!!!
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications