பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி.. இனி இவங்களுக்கு PM கிசான் கிடைக்காது.. திடீர்னு வந்த உத்தரவு
சென்னை: ஆதார் கார்டு குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.. பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின்கீழ் இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டம் அதாவது பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (பிஎம் கிசான்) என்ற திட்டமானது, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பிரதான் மந்திரி கிசான்: இந்த பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் மூலம் மத்திய அரசு சார்பாக விவசாயிகளுக்கு பண உதவி செய்யப்பட்டு வருகிறது. அதாவது, ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், ஒரு ஆண்டுக்கு மொத்தம் 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணம் பயனாளிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இதன் மூலம் எத்தனையோ விவசாயிகள் நாடு முழுவதும் பயன்பெற்று வருகின்றனர்.

அனைத்து விவசாயிகளும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் இந்த பலன்களை பெறலாம். ஆனால், இந்த பலனை பெற விரும்பினால், விவசாயிகளின் பிஎம் கிசான் கணக்குகளுடன் ஆதார் நம்பரையும் இணைக்க வேண்டும்.
ஆதாரை இணைத்தால்தான் தவணைத்தொகை கிடைக்கும்.. எனவே, இந்த திட்டத்தின் மூலம் பயிா் சாகுபடிக்கு தேவையான வேளாண் இடுபொருள்கள் கொள்முதல் செய்வதற்காக தவணை உதவித் தொகை பெறுவதற்கான நில ஆவணங்கள், ஆதாா் எண் ஆகியவற்றைப் பதிவேற்றம் செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என வேளாண் துறை அழைப்பு விடுத்தவாறே உள்ளது.
ஆதார் கார்டு: மற்றொருபுறம், பிஎம் கிசான் திட்டத்தில் தகுதியற்ற பயனாளிகளின் பெயர் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டும் வருகிறது... இதனால், பயனாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது.
இந்த 3 வருடத்தில், பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறும் விவசாயிகளின் எண்ணிக்கையில் 63 சதவீதம் சரிந்துவிட்டதாம். அதுமட்டுமல்ல, விவசாயிகளின் கல்வியறிவின்மை காரணமாக, அரசு கேட்கும் தகவல்களை வெப்சைட்டில் அப்லோடு செய்ய முடியாமலும் இந்தப் பிரச்சினையில் சிக்கியுள்ளனர்.
பிஎம் கிசான்: அதனால்தான், பிஎம் கிசான் திட்டத்தில் பெயர் நீக்கப்பட்ட பயனாளிகள் விரைவில் தங்களது கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்யும்படி அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல, பயனாளிகளின் கணக்கு விவரங்களை சரியாக இணைக்க வேண்டும்.. தவறாக இருந்தாலும், ஆதார் சரிபார்ப்பு முடிக்கப்படாமல் இருந்தால் ரூ.6000 நிதியுதவி கிடைக்காமல் போய்விடும்.

நம்முடைய கோவை மாவட்டத்திலும் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் பயனடையும் விவசாயிகள் தங்கள் ஆதார் உடன் வங்கி கணக்கு இணைக்க வேண்டும என்று கோவை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியிருக்கிறார்.
கோரிக்கை: இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்... அதில், "62,659 விவசாயிகள் பயன் பெற்று வருவதாகவும், இதில் 5817 விவசாயிகள் இதுவரை வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்கவில்லை. இவர்கள் உடனடியாக வங்கி கணக்கில் ஆதாரை இணைக்க வேண்டும். மேலும் வங்கி கணக்கு இல்லாதவர்கள் இந்தியா பேமெண்ட் வங்கி மூலம் ஜீரோ பேலன்ஸ் அடிப்படையில் கணக்கு தொடங்கி அதில் ஆதாரை இணைக்க வேண்டும்" என்று அறிவுறுத்தியிருக்கிறார்.
-
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்!












Click it and Unblock the Notifications