மோடி சர்வாதிகாரி... எடப்பாடி உதவாக்கரை.. மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
சென்னை: மோடி ஒரு சர்வாதிகாரி என்றும், எடப்பாடி உதவாக்கரை எனவும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வடசென்னை மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர் இவ்வாறு கூறினார். மேலும், இருவரும் நாட்டுக்கு தேவை இல்லாதவர்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமர் அல்ல என்றும், தேர்தல் நாட்களைத் தவிர வெளிநாடுகளுக்கு சென்றுவிடுவதாக கூறிய மு.க ஸ்டாலின், மோடி ஒரு வெளி நாட்டு வாழ் பிரதமர் என விமர்சனம் செய்தார்.

மக்களைப் பற்றியோ நாட்டைப் பற்றியோ சிந்தித்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்று விமர்சனம் செய்த ஸ்டாலின், மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளி வந்த உடனே எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி கவிழும் என்றார்.
ஹீரோவான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பார்த்து மோடி பயந்து விட்டார் என்றும், திமுகவின் தேர்தல் அறிக்கை கதாநாயகனாகவும், கதாநாயகியாகவும் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் நீட் தேர்வை நுழைய விட்ட அதிமுக அரசு மற்றொரு பக்கம் பயிற்சி மையத்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக தொடர்ந்து பாடுபடும் என்றும் மு க ஸ்டாலின் உறுதியளித்தார்.
வடசென்னையில் பிரச்சாரம் செய்ததை தொடர்ந்து, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.












Click it and Unblock the Notifications