அம்பேத்கரும் மோடியும் புத்தகத்திற்கு முன்னுரை.. இளையராஜாவுக்கு போனில் நன்றி கூறிய பிரதமர் மோடி
சென்னை: அம்பேத்கரும் மோடியும் என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய இளையராஜாவை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் அழைத்து நன்றி தெரிவித்துள்ளார்.
Recommended Video
ப்ளூ கிராப்ட் டிஜிட்டல் பவுன்டேஷன் எனும் அமைப்பின் சார்பில் வெளியான அம்பேத்கரும் மோடியும் சீர்திருத்தவாதிகளின் சிந்தனையும் செயல்வீர்ரகளின் நடவடிக்கையும் என்ற புத்தகத்திறகு இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார்.
அந்த புத்தகத்தில் இளையராஜா, பிரதமர் மோடி ஆட்சியின் பல திட்டங்கள், அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவை. பெண்கள், விளிம்புநிலை மக்களுக்கான பல திட்டங்களை மோடி அரசு வகுத்துள்ளது.

முத்தலாக் தடை சட்டம்
முத்தலாக் தடைச் சட்டம் உள்பட சட்டங்கள் மூலமாக நிகழ்ந்த சமூக மாற்றங்களை நினைத்து அம்பேத்கர் பெருமைப்பட்டிருப்பார் என இளையராஜா குறிப்பிட்டிருந்தார். இவர் மோடியை புகழ்ந்தும் அம்பேத்கருடன் ஒப்பிட்டதும் பெரும் சர்ச்சையை எழுப்பியது.

வாபஸ் பெற மாட்டேன்
எனினும் மோடி குறித்து தான் கூறிய கருத்தை வாபஸ் பெற மாட்டேன். நான் எந்த பதவிக்காகவும் அவரை புகழவில்லை. நான் இதுவரை மோடிக்கு ஓட்டு போடுங்கள் என்றும் ஓட்டு போடாதீர்கள் என்றும் சொன்னதே இல்லை. மோடி குறித்து அனைத்தையும் படித்து அறிந்தபின்னர்தான் முன்னுரை எழுதினேன் என தெரிவித்திருந்தார்.

அநாகரீகமற்ற முறை
சில நாட்கள் ஆகியும் இந்த பரபரப்பு அணையாமல் கொழுந்து விட்டு எரிந்து கொண்டே இருக்கிறது. இளையராஜாவை நாகரீகமற்ற முறையில் பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். திரைத்துறையில் உள்ள சிலர் அவருக்கு ஆதரவாகவும் சிலர் எதிராகவும் அறிக்கை வெளியிடுகிறார்கள்.

அம்பேத்கருடன் ஒப்பீடு
இந்த நிலையில் தன்னை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பாராட்டிய இளையராஜாவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இளையராஜாவை தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அழைத்து பிரதமர் மோடி பேசியுள்ளார். அப்போது இளையராஜாவிடம் நன்றி தெரிவித்துள்ளார். அம்பேத்கர் குறித்தும் அவரின் சிந்தனைகளை செயல்படுத்தி வருவது குறித்தும் பிரதமர் மோடி அடிக்கடி பேசி வருகிறார். இந்த நிலையில் இளையராஜா பாராட்டியதால் மோடி மகிழ்ச்சி அடைந்துள்ளதாக பாஜகவினர் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications