காக்கை வன்னியர்களைத் தெரியுமா...? ராமதாஸ் ட்வீட்டரில் கேள்வி
Recommended Video
சென்னை: இட ஒதுக்கீட்டுக்காக போராடி உயிர்நீத்த சத்திரிய வன்னியர்களை தெரியும், காக்கை வன்னியர்களைத் தெரியுமா என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் ட்வீட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
வன்னிய சமுதாய மக்களுக்கு திமுக செய்த சாதனைகளையும், அவர்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டங்களையும் பட்டியலிட்டு அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் இட ஒதுக்கீடு கோரி போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கும், வன்னிய சமுதாயத்தின் தனிப்பெரும் தலைவருமான ஏ.கோவிந்தராஜூவுக்கும் மணிமண்டபம் கட்டப்படும் என உறுதியளித்திருந்தார்.

இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக எதிர்வினையாற்றினார். இதனால் வன்னிய சமுதாயத்தை சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ராமதாசுக்கு கண்டனம் தெரிவித்து இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டார். அதில் ராமதாசுக்கு பதிலடி தரும் வகையில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் அந்த அறிக்கை வெளியாகி ஒரு மணி நேரத்திற்குள் ராமதாஸ் ட்வீட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அந்தப் பதிவில், இட ஒதுக்கீட்டுக்காக போராடி உயிர்நீத்த சத்திரிய வன்னியர்களை உங்களுக்குத் தெரியும், காக்கை வன்னியர்களைத் உங்களுக்குத் தெரியுமா? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதிலிருந்து காக்கா பிடித்து பிழைப்பு நடத்தும் வன்னியர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் என்பது பொருள்படுகிறது.

இதனிடையே ட்வீட்டரில் ராமதாஸை பின் தொடர்பவர்கள் அவரது பதிவுக்கு கருத்து தெரிவித்துள்ளனர். அதில் சிலர் ராமதாஸ் பதிவை வரவேற்றும், சிலர் கடுமையாக எதிர்த்தும் ட்வீட் போட்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications