“தந்தையை மிஞ்சிய தனயன் இருக்க கூடாது..” ராஜேந்திர சோழனை உதாரணமாக சொன்ன ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை: பூம்புகாரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் மாநில மாநாடு இன்று நடைபெற்றது. இதில் பேசிய கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக்கூடாது என்று கூறியிருந்தார்.

ஏற்கெனவே மகன் அன்புமணிக்கும் இவருக்கும் இடையே பிரச்சனை நீடித்து வரும் நிலையில், தந்தையை விட தனயன் மிஞ்சியவனாக இருக்க கூடாது என்று பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

Ramadoss PMK tamil nadu

இதில் ராமதாஸ் பேசியதாவது, "கங்கை கொண்ட சோழபுரத்தை பற்றி எனக்கு முன்னாள் பேசியவர்கள் கூறியிருந்தார்கள். ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலையும், ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலையும் கட்டியிருந்தனர். சமீபத்தில் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றிருந்தார்.

அப்போது அவர் 'தந்தையை மிஞ்சிய தனயன் இருக்க கூடாது' என்பதற்காக உதாரணமாக தஞ்சை பெரிய கோயிலையும், கங்கை கொண்ட சோழபுரம் கோயிலையும் சொல்லியிருந்தார். அருமையான வார்த்தை.

என்னுடைய அருமை நண்பர் கலைஞர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இடஒதுக்கீட்டை கொடுத்திருந்தார். இதனால் 108 சமூதாயங்கள் பயன்பட்டன. இப்போது முதலமைச்சராக நீங்கள் தந்தையை மிஞ்சிய தனயனாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இதை செய்ய ஏன் தயங்குகிறீர்கள்? என தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்.

சிலப்பதிகாரத்தில் மாமழை போற்றதும், திங்களை போற்றதும் என்று சொல்லியிருந்தார்கள். இன்னொன்றை அவர்கள் அந்த காலத்தில் சொல்லவில்லை. பெண்களை போற்றதும் என்று சொல்லவில்லை. அதை நாம் இப்போது சொல்லுவோம்." என்று பேசியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+