நான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு
சென்னை: அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குருவின் நினைவு மணிமண்டபத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் திறந்து வைத்தார்.
அப்போது பேசிய அவர், ஜெ.குருவை தனது மூத்த பிள்ளையாகவே எண்ணியதாகவும், அவர் மறைவு தனக்கு வழங்கப்பட்ட தண்டனை என்றும் உருக்கமாக தெரிவித்தார். மேலும், குரு மறைந்துவிட்டார் என்பதை இன்னும் தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் கூறினார். குரு உயிரோடு இருந்தபோது திமுகவினர் அவருக்கு பல்வேறு வழிகளில் குடைச்சல் கொடுத்ததாகவும், தானும், ஜி.கே.மணியும் தான் அவரை பாதுகாத்ததாகவும் நினைவு கூர்ந்தார்.

தமக்கு ஒரு போதும் பதவி ஆசை ஏற்பட்டதில்லை என்றும், அவ்வாறு இருந்திருந்தால் எப்போதோ தன்னால் ஆளுநர் ஆகியிருக்க முடியும் எனவும் கூறினார். மேலும், குருவின் சொந்தக்கிராமமான காடுவெட்டிக்கு தேவையான உதவிகளை அன்புமணி ராமதாஸ் முன்னின்று செய்வார் எனவும் உறுதி அளித்தார்.
மேலும், விழாவில் பேசியவர்கள் அன்புமணியை முதல்வராக்க ஜெ.குரு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகவும், காலம் அவரை பறித்துக்கொண்டது என்றும் கண் கலங்கினர். இதனிடையே குருவின் நினைவு மணி மண்டபத்தை சுற்றிப்பார்த்த வன்னியர் சங்க இளைஞர்கள் பாமக நிறுவனர் ராமதாஸை புகழ்ந்து தள்ளினர். கடந்த 8 மாதகாலமாக ஜெ.குருவின் நினைவு மணி மண்டபம் கட்டுமான பணிகளில் ராமதாஸ் தனிக் கவனம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications