படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி?
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி முழுமையாக அன்புமணி ராமதாஸ்-ன் கட்டுப்பாட்டில் வந்திருக்கும் நிலையில் தனது விடப்பட்டிருக்கிறார் கட்சியின் நிறுவனரான ராமதாஸ். ஆரம்பத்திலிருந்து ஜிகே மணி உள்ளிட்டோரின் தவறான வழிகாட்டுதலால் தான் ராமதாஸ் இந்த நிலைமைக்கு ஆளானதாக தைலாபுரம் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாஸை சந்திக்கச் சென்ற ஜிகே மணியை ராமதாஸின் மகளான கவிதா கணேஷ் கடுமையாக சாடியதாக தகவல்கள் உலாவுகின்றன.
2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியில் நடக்கும் நிகழ்வுகள் கிளைமாக்ஸுக்கு வந்துள்ளன. கட்சியின் இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற அதற்குப் பிறகு கட்சி முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
இளைஞரணி தலைவர் பதவி தொடர்பாக ஜிகே மணிக்கும் அன்புமணிக்கும் விரிசல் விழுந்த நிலையில், ஒரு கட்டத்தில் அன்புமணியை கட்சியிலிருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். ஆனால் கட்சியின் தலைவர் நான்தான் எனக் கூறிய அன்புமணி பொதுக்குழு கூட்டத்தை நடத்தி முடித்தார்.

பாமக மோதல்
ராமதாஸ் போட்டி, பொதுக்குழு - செயற்குழு கூட்டங்களை நடத்தினாலும் அது தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தை திருப்திப்படுத்தும் வகையில் அமையவில்லை. இதற்கிடையே அதிமுக பாஜக கூட்டணியில் அன்புமணி இணைந்த நிலையில் 18 சட்டமன்ற தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது சௌமியா அன்புமணி உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் தேர்தலில் நிற்கும் நிலையில் அன்புமணி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
ராமதாஸ்
இதற்கிடையே தான் உருவாக்கிய கட்சி தன்னை விட்டு போய்விட்டதால் அதிருப்தியில் இருக்கும் ராமதாஸ் சில தொகுதிகளில் போட்டி வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியின் சின்னம், கொடி, பெயர் ஆகியவற்றை உபயோகிக்க கூடாது என்பதால் புதிய அமைப்பை ஏற்படுத்தி பல்வேறு சின்னங்களில் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறார் ராமதாஸ். இது ஒரு புறம் இருக்க ஆரம்பத்திலிருந்து ராமதாசை ஜிகே மணி உள்ளிட்டோர் தவறாக வழி நடத்துவதாக தொடர் புகார்கள் அன்புமணி தரப்பால் முன்வைக்கப்பட்டது.
ராமதாஸ் மயக்கம்
இதற்கிடையே நேற்று சேலத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராமதாஸ் திடீரென மயக்கம் அடைந்தார். உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ராமதாஸ் பல்வேறு முக்கிய தலைவர்கள் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்து வருகின்றனர்.
ஜிகே மணி
இதற்கிடையே சென்னை கிரீம்ஸ்சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் கட்சியின் முன்னாள் தலைவரான ஜிகே மணி மருத்துவமனைக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஜிகே மணியை பார்த்ததும் ராமதாஸின் மூன்றாவது மகளான கவிதா கணேஷ் உச்சகட்ட கோபமடைந்து கடுமையாக சாடியதாக கூறப்படுகிறது.
கவிதா கணேஷ்
" எங்கள் குடும்பத்தை பிரித்தது நீங்கள்தான்.. இப்போது எதற்காக இங்கே வந்தீர்கள்? எங்கள் குடும்பத்தை பிரித்து விட்டு உங்கள் மகனுக்கு காங்கிரஸில் சீட்டு வாங்கி விட்டீர்கள்! திமுகவுக்கு வேண்டுமானால் நீங்கள் போய் சேர்ந்து கொள்ள வேண்டியதுதானே? நாங்கள் உங்களை தடுக்கவில்லை! ஆனால் பதவிக்காக சதி செய்து எங்கள் குடும்பத்தை பிரித்து விட்டீர்கள்!
பாமக அரசியல்
இதுவரைக்கும் இந்த குடும்பத்திற்கு செய்த துரோகங்கள் பத்தாதா? இதற்கு மேல் என்ன இருக்கிறது? இப்போது என்ன சதி செய்வதற்காக ஆஸ்பத்திரிக்கு வந்தீங்க? வர்ற கோவத்துக்கு என்ன செய்வேன் என எனக்கு தெரியாது மரியாதையாக போய்விடுங்கள்" என கொந்தளித்தாராம். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த ஜிகே மணி சிறிது நேரம் ஸ்டன்னாகி நின்று விட்டு பிறகு அவசர அவசரமாக மருத்துவமனையில் இருந்து வெளியேறினார் என்கின்றனர் தைலாபுரம் வட்டாரத்தினர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications