Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எதிர்க்கட்சியா இருந்தாலும்.. “டாக்டர் ஐயா மனம் திறந்து பாராட்டச் சொன்னாரு” - ஜி.கே.மணி பேச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை : 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி பொறுப்பை ஏற்றது.

முதல்முறையாக தமிழகத்தின் முதல்வராக கடந்த ஆண்டு மே 7-ஆம் தேதி ஸ்டாலின் பதவியேற்றார். முதல்வராக ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய பா.ம.க எம்.எல்.ஏ ஜி.கே.மணி, முதல்வரின் கடந்த ஓராண்டுப் பணியை பா.ம.க சார்பில் மனதாரப் பாராட்டுகிறேன். மனம் திறந்து பாராட்டுங்கள் என ராமதாஸ் கூறினார் எனத் தெரிவித்துள்ளார்.

 ஸ்டாலின் ஓராண்டு ஆட்சி

ஸ்டாலின் ஓராண்டு ஆட்சி


மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி, தனது தலைமையிலான அரசு ஓராண்டில் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்தும், புதிய திட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

முதல்வர் ஸ்டாலினின் உரையைப் புறக்கணித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சபாநாயகர் அப்பாவு, சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் என பலரும் தி.மு.க அரசை வாழ்த்திப் பேசினர்.

ராமதாஸ் பாராட்ட சொன்னார்

ராமதாஸ் பாராட்ட சொன்னார்

முதல்வரின் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய பா.ம.க சட்டமன்ற கட்சித் தலைவர் ஜி.கே.மணி, "முதல்வரின் அறிவிப்புகளைப் பார்த்துவிட்டு எதிர்க்கட்சி என்பதற்காக பேசாமல் இருக்க முடியுமா? இன்று காலை மருத்துவர் ஐயாவிடம் பேசினேன். இன்று கேள்வி நேரம் இல்லை. ஓராண்டு நிறைவு என்பதால், ஏதாவது பேச வேண்டி இருக்கும் என்று சொன்னேன். "மணி, மனம் திறந்து பாராட்டுங்கள்" என்று கூறினார்" எனத் தெரிவித்தார்.

 தமிழகம் தலைநிமிரட்டும்

தமிழகம் தலைநிமிரட்டும்

மேலும், பேரவையில் நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் அன்போடு அரவணைக்கும் முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். முதல்வரின் கடந்த ஓராண்டுப் பணியை, ஆட்சி கடந்து வந்த பாதையை, அமைச்சர்களின் செயல்பாடுகளை எல்லாம் பார்த்து பா.ம.க சார்பில் மனதாரப் பாராட்டுகிறேன். உங்களின் பணி தொடரட்டும், தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கட்டும் எனப் பேசினார்.

உயிரையும் பொருட்படுத்தாமல்

உயிரையும் பொருட்படுத்தாமல்

தொடர்ந்து பேசிய ஜி.கே.மணி, நடுநிலையோடு கூறவேண்டுமென்றால் கடந்த ஓராண்டு என்பது சாதாரண காலமல்ல. உலகையே உலுக்கிக் கொண்டிருந்த கொரோனா காலம். பெருந்தொற்றின்போது உயிரையும் பொருட்படுத்தாமல் எல்லா இடத்துக்கும் சென்று மக்களை காத்தவர் முதல்வர் ஸ்டாலின் என முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டிப் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+