அன்புமணியால் கண்ணீர் வடித்து கலங்கிய ராமதாஸ்! சென்னையில் இன்று பாமக போராட்டம் ஒத்திவைப்பு
சென்னை: "அன்புமணிதான் பாமக தலைவர்" என அறிவித்த தேர்தல் ஆணையத்தை கண்டித்து பாமக சார்பில் இன்று சென்னையில் நடக்கவிருந்த போராட்டம் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தைலாபுரம் தோட்டத்தில் இருந்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையில் கனமழையின் காரணமாக கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோலத்தான் போராட்டம் நடத்துவது மிகவும் சிரமம் என்பதால், சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 02.12.2025 செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள போராட்டம் கடும் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது. மீண்டும் போராட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அது போல் டெல்லியில் டிசம்பர் 4ஆம் தேதி வியாழக்கிழமை நீதி கேட்டு போராட்டம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: நான் 1980-ல் இயக்கம் தொடங்கி இன்று வரை 46 ஆண்டுகள் கட்சி நடத்தி வருகிறேன். கடந்த காலத்தில் சாலை வசதி, மின்சார வசதி இல்லாத நிலையில் வயல் வரப்பில் நடந்து சென்றோம். இராந்தல் விளக்கு பிடித்தும் பல கூட்டங்களில் பேசி 96 ஆயிரம் கிராமங்களுக்குச் சென்று கட்சி வளர்த்து சமூக நீதியை உயிர் மூச்சு கொள்கையாகக் கொண்டு மக்கள் மேம்பட ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு குரல் கொடுத்தும் போராடியும் வருகிறேன்.
தமிழ்நாட்டில் வன்னியர்கள் உள்ளிட்ட மிக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20% இட ஒதுக்கீடும், அருந்ததியர்களுக்கு 3% இட ஒதுக்கீடும் முஸ்லிம்களுக்கு 3.5% இட ஒதுக்கீடும் பெற்றுக்கொடுத்தேன். அதன் பின் வன்னியர்களுக்கு 10.5 % இட ஒதுக்கீடும் பெற்றுக்கொடுத்தேன். ஆனால் இது இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்திய அளவில் மத்திய கல்வி நிறுவனங்களின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 27% இட ஒதுக்கீடு மத்திய மருத்துவ படிப்பில் பட்டியலின பழங்குடியினர் SC-ST வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்ததை நாடே அறியும்.
நான் தொடங்கிய பாட்டாளி மக்கள் கட்சிக்கு பேராசிரியர் தீரன் தலைவராக இருந்து செயல்பட்டார். அடுத்து ஜி.கே.மணி 25 ஆண்டு காலம் தலைவராக செயல்பட்டு வந்தார். அடுத்து அன்புமணி தலைவராக விரும்பியதால் சென்னை அடுத்துள்ள திருவேற்காடு GPN பேலஸில் 28.5.2022 அன்று பொதுக்குழுவை கூட்டி தலைவராக தேர்ந்தெடுத்து அறிவித்தேன். ஆனால் அன்புமணி சதி திட்டம் தீட்டி 2023 பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக போலியான ஆவணங்களை டில்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் கொடுத்து தேர்தல் ஆணையத்தை கையில் போட்டுக்கொண்டு 2026 வரையில் பதவியில் நீடிப்பதாக தேர்தல் ஆணையம் கடிதம் கொடுத்துள்ளது.
இது மிகப்பெரிய கண்டனத்துக்குரியது. இது தேர்தல் ஆணையத்தின் மோசடியான துரோக நடவடிக்கை.
தேர்தல் ஆணையம் அன்புமணிக்கு உடந்தையாக உள்ளது. அன்புமணி கட்சியை என்னிடமிருந்து சூழ்ச்சியால் பறித்துக் கொண்டது கட்சி திருட்டு செயல். தேர்தல் ஆணையம் கட்சியை என்னிடமிருந்து பறித்து அன்புமணிக்கு திருடி கொடுத்துள்ளது. இப்படி எனது கட்சியை பறித்துக்கொண்டது என் உயிரை பறித்ததாகும். 46 ஆண்டு காலம் உழைத்து போராடிய என்னிடமிருந்து பறித்துக் கொண்டது சொல்ல முடியாத உயிர் பரிபோன செயல் கண்ணீர் வடிக்கிறேன். கலங்கி நிற்கிறேன்.
இதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். எனது கட்சி என்கைக்கு வரும் என நம்பிக்கையோடு இருக்கிறேன். தேர்தல் ஆணையத்தின் மோசடியான கட்சியை திருடி கொடுத்த ஜனநாயக படுகொலையை கண்டித்து நீதிகேட்டு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 02.12.2025 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் பா.ம.க கௌரவத் தலைவர் ஜி.கே.மணி MLA., தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இதில் இன்னாள், முன்னாள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, வட்ட, ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பெருந்திரளாக கலந்து கொள்வார்கள்.
அடுத்து தேர்தல் ஆணையத்தின் மோசடி நடவடிக்கையை கண்டித்தும், நீதிகேட்டும் புது டெல்லியில் 04.12.2025 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு போராட்டம் நடத்தப்படும். தமிழ்நாட்டிலிருந்து பா.ம.க.வினர் போராட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி செல்கிறார்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.
-
விஜய்யை எதிர்த்து.. பெரம்பூரில் களமிறங்கும் பாமகவின் திலகபாமா! அன்புமணியின் மூவ்! -
பெரம்பூரில் திலகபாமா, தருமபுரியில் சவுமியா, விருத்தாசலத்தில் தமிழரசி! பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு -
குறுக்க இந்த கவுசிக் வந்தா.. 2026ல் டாக்டர் தனித்து போட்டி! ஏற்கனவே லைனில் சசி-அய்யா! 6 முனை போட்டி? -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications