தந்தையை வேவு பார்த்த மகன்.. ஒட்டுக்கேட்பு கருவியை வைத்த அன்புமணி.. திட்டவட்டமாக சொன்ன ராமதாஸ்
சென்னை: தைலாபுரம் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவியை வைத்தது அன்புமணி தான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணியாக மட்டுமே இருக்க முடியும் என்று கூறியுள்ள ராமதாஸ், ஒட்டுக்கேட்பு கருவியை அன்புமணியை தவிர வேறு யாரும் வைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக தைலாபுரத்தில் ராமதாஸ் அமரும் இருக்கையில் இருந்து ஒட்டுக்கேட்பு கருவி கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பாமக தரப்பில் ஒட்டுக்கேட்பு கருவியை வைத்தது யார் என்று கண்டுபிடிக்க காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதனிடையே ஒட்டுக்கேட்பு கருவியை வைத்தது யார் என்பது தனக்குத் தெரியும் என்று ராமதாஸ் கூறி பரபரப்பைக் கிளப்பினார். இதனிடையே அன்புமணி பொதுக்குழுவை கூட்டி இருக்கிறார். இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து ராமதாஸ் பேசுகையில், பாமக எனது கட்சி.. நான்தான் தலைவர். வியர்வை சிந்தி 96 ஆயிரம் கிராமங்களுக்குப் பயணித்து வளர்த்த கட்சி.
வேறு யாரும் பாமகவை உரிமை கொண்டாட முடியாது. நான் ஆகஸ்ட் 17ஆம் தேதி பொதுக்குழுவை அறிவித்துள்ளேன். என்னால் செயல் தலைவர் என்று அறிவிக்கப்பட்ட அவர் ஆகஸ்ட் 9ல் பொதுக்குழு என்று கூறுகிறார். ஒரு பொதுக்குழு கூட்டப்பட வேண்டும் என்றால், 15 நாட்களுக்கு முன்பாக அறிவிக்கை அனுப்ப வேண்டும். பாமக பெயரில் வேறு ஒருவர் பொதுக்குழுவைக் கூட்டுகிறேன் என்று சொல்வது சட்டத்திற்கும் கட்சி விதிகளுக்கும் புறம்பானது.
உலகிலேயே தந்தையை உளவு பார்த்த பிள்ளை இருக்கிறதா என்றால், இருக்கிறார். என்னை வேவு பார்த்திருக்கிறார்கள். இதுதொடர்பாக விழுப்புரம் காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறேன். சைபர் கிரைம் போலீசாரிடமும் புகார் அளித்துள்ளேன். ஒட்டுக்கேட்பு கருவியை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளோம். எங்கள் தரப்பில் தனியார் சிறப்புப் பிரிவு ஒன்றை நாடி, விசாரணை நடத்தி இருக்கிறோம்.
விரைவில் அந்த அறிக்கையும் கைகளுக்கு வரும். பாமக மகளிர் மாநாடு ஆகஸ்ட் 10ஆம் தேதி நடக்கவுள்ளது. அன்புமணி ஒவ்வொரு முறையும் ஒரு பொய்யைச் சொல்லி வருகிறார். என்னை சந்திக்கக் கூடாது என்று மாவட்டச் செயலாளர்களுக்கு தொலைப்பேசி மூலம் அழைத்து அன்புமணி அறிவுறுத்தி இருக்கிறார். அந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு வெறும் 8 பேர் மட்டுமே வந்தனர்.
இதனால் அவர்களின் இடத்திற்கு வேறு நிர்வாகிகளை நியமனம் செய்துவிட்டோம். அதேபோல் ஒட்டுக்கேட்பு கருவியை வேறு யாரும் எனது இருக்கையில் வைத்திருக்க முடியாது. தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக் கூடாது என்று பிரதமர் மோடி ஒரு இடத்தில் பேசி இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
-
மாம்பழத்தின் ‘மாஸ்டர் பிளான்’.. திருப்போரூரில் தடம் பதிக்கிறார் சௌமியா அன்புமணி? பாமக மேஜர் முடிவு -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
‘அய்யா பாமக’.. ராமதாஸ் அணியின் புதிய கட்சி! தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம்.. தலைவர் யாரு பாருங்க? -
கீழ்வேளூரில் வடிவேல் ராவணன், அம்பத்தூரில் சேகர்.. பாமகவின் 3 வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி! -
அய்யாவுக்கு கடைசி சான்ஸ்.. ’மாம்பழம்’ கேட்டு அடம் பிடிக்கும் ராமதாஸ்! இன்று கோர்ட்டில் விசாரணை! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
திருப்போரூர் அல்லது பாப்பிரெட்டிபட்டி.. செளமியா அன்புமணி களமிறங்கும் தொகுதி எது? -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications