Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அச்சச்சோ.. கார் விபத்தில் சிக்கிய அன்புமணியின் மனைவி சவுமியா.. திண்டிவனம் ரோட்டில் என்னாச்சு..?

சவுமியா அன்புமணி, திண்டிவனம் கார் விபத்தில் காயமின்றி உயிர்பிழைத்தார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி, சென்று கொண்டிருந்த கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றாலும், இந்த விபத்தில் சவுமியா, காயமின்றி தப்பியது, தைலாபுரத்தில் நிம்மதியை தந்துள்ளது.

டாக்டர் அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா.. தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருப்பவர் சவுமியா அன்புமணி.. ஆனால், ஒவ்வொரு முறை தேர்தலின்போதும், சவுமியாவுக்கும் சீட் தரப்படப்போவதாகவும், தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் செய்திகள் பரபரக்கும்.

அரசியலில் ஈடுபடாவிட்டாலும், பிற நற்காரியங்களில் சவுமியா அன்புமணி தன்னை ஈடுபடுத்தி கொண்டு வருகிறார்.. குறிப்பாக, பசுமைதாயகம் பெயரில் பல்வேறு விழிப்புணர்வினை வருடந்தவறாமல் ஊட்டி வருகிறார்..

விஜயகாந்த்

விஜயகாந்த்

ரமணா படத்தில் விஜயகாந்த் பேசுவாரே, அதே போல, புள்ளிவிவரங்களுடன் கூடிய முக்கிய தரவுகளை தன்னுடைய விழிப்புணர்வு பேச்சுக்களில் வெளிப்படுத்தி அசரடித்து விடுவார் சவுமியா.. இந்நிலையில், சவுமியா சென்ற கார் திடீர் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.. எனினும் இந்த விபத்தில் சிறிய காயமின்றி சௌமியா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். நேற்று முன்தினம் காலை சென்னையில் இருந்து திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்திற்கு டொயோட்டா இன்னோவா காரில் சவுமியா சென்று கொண்டிருந்தார்...

 சடன் பிரேக்

சடன் பிரேக்

அப்போது திண்டிவனம் - சென்னை சாலையில் உள்ள பாதிரி கிராமம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர டீக்கடையில் இருந்து கார் ஒன்று திடீரென சாலையில் திரும்பியது.. அந்த நேரம்பார்த்து, சென்னையில் இருந்து திண்டிவனம் வழியாக, காரை ஓட்டி வந்தவர் திடீரென பிரேக் அடித்துள்ளார்... அப்போது பின்னால் சவுமியா அன்புமணி வந்த கார் உள்பட 5 கார்கள் புறவழிச்சாலையில் ஏறிய கார் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டதால், அடுத்தடுத்து ஒன்றன் மீது ஒன்று மோதிக்கொண்டன..

 தைலாபுரம் தோட்டம்

தைலாபுரம் தோட்டம்

இந்த விபத்தில் சிக்கிய 5 கார்களும் லேசான சேதமடைந்தன.. அந்தவகையில், சவுமியாவும் காயமின்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். பாதிரிகிராமம் தேசிய நெடுஞ்சாலையில் காலை 10.30 மணிக்கு கார் வந்தபோது, இந்த விபத்து நடந்துள்ளது.. 5 டிரைவர்களும் ஒன்றாக, ஒரே சமயத்தில் பிரேக் போட்டதால், மிகப்பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது.. ஆனால் கார்கள் மட்டும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன..

தைலாபுரம்

தைலாபுரம்

இதில், சவுமியா காரின் பின்பக்கமும் மோதியதால், கார் பகுதியின் முன் மற்றும் பின் பகுதி லேசான சேதம் அடைந்தன.. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் போலீசார், போக்குவரத்தை உடனடியாக சீரமைத்தனர். எனினும், கார் விபத்தில் சிக்கியது தொடர்பாக தொடர்பாக யாரும் புகார் அளிக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்... இறுதியில், சவுமியா அன்புமணி வேறு கார் மூலம், தைலாபுரம் தோட்டத்துக்கு கிளம்பி சென்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+