சோதனை மேல் சோதனை! பொன்முடி மகன் கவுதம சிகாமணி மீதான அமலாக்கத்துறை வழக்கில் நாளை குற்றச்சாட்டு பதிவு!
சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றார் முன்னாள் அமைச்சர் பொன்முடி. பொன்முடியின் மகனும் திமுகவின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்பியுமான கவுதம சிகமாணி மீதான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் நாளை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட உள்ளன.
2006- 2011 திமுக ஆட்சியில் இருந்த போது கனிமவளத் துறை அமைச்சராகவும் இருந்தார் பொன்முடி. அப்போது செம்மண் குவாரிகளில் சட்டவிரோதமாக செம்மண் எடுத்து அரசுக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டதாக 2012-ல் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் பொன்முடி, அவரது மகன் தற்போதைய கள்ளக்குறிச்சி திமுக எம்பி கவுதம சிகமாணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், கோபிநாத், கோதகுமார், சதானந்தன், லோகநாதன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு தற்போது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதே வழக்கின் அடிப்படையில் கவுதம சிகாமணி உள்ளிட்டோர் மீது சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் கீழ் பொன்முடி, கவுதம சிகமாணி உள்ளிட்டோர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டது.
மேலும் கவுதம சிகாமணி உள்ளிட்ட 6 பேர் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. பின்னர் குற்றப்பத்திரிகை ஏற்கப்பட்டு வழக்கு விசாரணை 12-வது கூடுதல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு முன்னர் 12-வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பாக விசாரணைக்கு வந்தது. அன்றைய விசாரணையில் கவுதம சிகாமணி ஆஜராகவில்லை. மேலும் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனவும் கவுதம சிகாமணி தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த விசாரணை முடிவில் நாளைய தினம் ஜனவரி 4-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
12-வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு நாளை நடைபெறும் விசாரணையின் போது கவுதம சிகாமணி உள்ளிட்ட 6 பேர் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட உள்ளன. ஆகையால் கவுதம சிகாமணி உள்ளிட்ட 6 பேரும் நாளை நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர்.
அண்மையில் கவுதம சிகாமணியின் தந்தை பொன்முடி, அவரது தாயார் விசாலாட்சி ஆகியோருக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சென்னை நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
அமுதா அக்காவுக்கு சிரிப்பு தங்கல.. நாதக வேட்பாளரை பூத்தூவி வரவேற்ற திமுகவினர்! இது கூட தெரியாதா? -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications