சோதனை மேல் சோதனை! பொன்முடி மகன் கவுதம சிகாமணி மீதான அமலாக்கத்துறை வழக்கில் நாளை குற்றச்சாட்டு பதிவு!
சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றார் முன்னாள் அமைச்சர் பொன்முடி. பொன்முடியின் மகனும் திமுகவின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்பியுமான கவுதம சிகமாணி மீதான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் நாளை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட உள்ளன.
2006- 2011 திமுக ஆட்சியில் இருந்த போது கனிமவளத் துறை அமைச்சராகவும் இருந்தார் பொன்முடி. அப்போது செம்மண் குவாரிகளில் சட்டவிரோதமாக செம்மண் எடுத்து அரசுக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டதாக 2012-ல் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் பொன்முடி, அவரது மகன் தற்போதைய கள்ளக்குறிச்சி திமுக எம்பி கவுதம சிகமாணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், கோபிநாத், கோதகுமார், சதானந்தன், லோகநாதன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு தற்போது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதே வழக்கின் அடிப்படையில் கவுதம சிகாமணி உள்ளிட்டோர் மீது சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் கீழ் பொன்முடி, கவுதம சிகமாணி உள்ளிட்டோர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டது.
மேலும் கவுதம சிகாமணி உள்ளிட்ட 6 பேர் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. பின்னர் குற்றப்பத்திரிகை ஏற்கப்பட்டு வழக்கு விசாரணை 12-வது கூடுதல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு முன்னர் 12-வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பாக விசாரணைக்கு வந்தது. அன்றைய விசாரணையில் கவுதம சிகாமணி ஆஜராகவில்லை. மேலும் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனவும் கவுதம சிகாமணி தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த விசாரணை முடிவில் நாளைய தினம் ஜனவரி 4-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
12-வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு நாளை நடைபெறும் விசாரணையின் போது கவுதம சிகாமணி உள்ளிட்ட 6 பேர் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட உள்ளன. ஆகையால் கவுதம சிகாமணி உள்ளிட்ட 6 பேரும் நாளை நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர்.
அண்மையில் கவுதம சிகாமணியின் தந்தை பொன்முடி, அவரது தாயார் விசாலாட்சி ஆகியோருக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சென்னை நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி!











Click it and Unblock the Notifications