உதயநிதி வீட்டுக்கு சென்ற வைரமுத்து.. “தாத்தாவிடம் இருந்த அந்த நிதானம் இப்போதே”.. வைரமுத்து ட்வீட்!
சென்னை: கவிஞர் வைரமுத்து, தனது மகனும் கவிஞருமான மதன் கார்க்கியுடன் சென்று தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்துப் பேசியுள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை, அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்துப் பேசியுள்ளார் கவிஞர் வைரமுத்து. அப்போது அவருடன் பாடலாசிரியர் மதன் கார்க்கியும் சென்றுள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடனான சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நிதானத்தை இந்த வயதிலேயே உதயநிதி ஸ்டாலின் அடைந்திருக்கிறார், தலைமைப் பண்புகளின் தனிக் குணங்களைக் கொண்டிருக்கிறார் என வியந்துள்ளார் கவிஞர் வைரமுத்து.
கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"துணை முதலமைச்சர்
உதயநிதி ஸ்டாலின் அவர்களை
நானும் மகன் மதன் கார்க்கியும்
முகாம் அலுவலகத்தில்
சந்தித்து மகிழ்ந்தோம்.
அந்த வயதில் அவர் தாத்தா
அடைந்த நிதானத்தை
இந்த வயதில்
உதயநிதி அடைந்திருக்கிறார்.
பதற்றப்படாத உடல்மொழி,
அவசரம் இல்லாத வாக்கியங்கள்,
புன்னகையில்
நனைந்துவரும் வார்த்தைகள்,
எதிராளியைப்
பேச விட்டுக் கேட்கும்
பெருந்தன்மை,
சக மனிதர் மீது அக்கறை
இவையெல்லாம்
தலைமைப் பண்புகளின்
தனிக் குணங்கள்
வாய்த்திருக்கிறது
உதயநிதிக்கு
வாழ்த்தி
விடைகொண்டோம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications