திரைப்பாட்டுக்குள் செழுந்தமிழ் செய்தவர் பாடலாசிரியர் புலமைப்பித்தன்... வைரமுத்து புகழஞ்சலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திரைப்பாட்டுக்குள் செழுந்தமிழ் செய்தவர் மறைந்த கவிஞர் பாடலாசிரியர் புலமைப்பித்தன் என்று கவிப்பேரரசு வைரமுத்து புகழஞ்சலி செலுத்தியுளார்.

முதுபெரும் கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான கவிஞர் புலமைப்பித்தன் (வயது 86) எம்.ஜி.ஆர் நடித்த பெரும்பாலான திரைப்படங்களில் காலத்தால் அழியாத பல காவியங்களை பாடல்களாக கொடுத்தவர் கவிஞர் புலமைப்பித்தன். தமிழர் நலன் சார்ந்த போராட்டங்களில் பங்கெடுத்தவர். அதிமுகவின் அவைத்தலைவராகவும் பதவி வகித்தவர்.

Poet Vairamuthu condoles demise of Lyricist Pulamaipiththan

வயது முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமது ட்விட்டர் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள புகழஞ்சலி:

Poet Vairamuthu condoles demise of Lyricist Pulamaipiththan

தமிழ்க் கலைஉலகில்
புலவர் மரபில் வந்த
பாடலாசிரியர் புலமைப்பித்தன்

திரைப்பாட்டுக்குள்
செழுந்தமிழ் செய்தவர்

அவருடைய பல பாடல்கள்
மேற்கோள் காட்டத்தக்கவை

தமிழ் தமிழர் என்ற
இரண்டு அக்கறைகள் கொண்டவர்

அவர் மறைவு
துயரம் தருகிறது

குடும்பத்தார்க்கும்
தமிழன்பர்களுக்கும்
என் ஆழ்ந்த இரங்கல்

இவ்வாறு கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+