"டெல்லியின் மொகல் தோட்டத்தில் பூத்த கோவை மல்லிகை" - சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வைரமுத்து வாழ்த்து
சென்னை: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் என்டிஏ கூட்டணி சார்பாக போட்டியிட்ட தமிழகத்தைச் சேர்ந்தவரான சிபி ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், குடியரசுத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் 15 ஆவது துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட பி. சுதர்சன் ரெட்டி, 300 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார்.

இந்நிலையில், குடியரசுத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
"இந்தியத் திருநாட்டின்
குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்
திரு சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு
என் வாழ்த்துப் பூக்களை
தூரத்திலிருந்தே தூவுகிறேன்
பெருமைக்குரிய பெருநாட்டின்
பெரும் பொறுப்பில்
ஒரு தமிழர் அமர்கின்றார்
என்ற பெருமிதத்தை
என்னால் மறைக்க முடியவில்லை
இந்தப் பொறுப்புக்கு வந்ததுமே
அவரது அரசியல்சார்பு அகன்று
ஒரு பொதுத்தன்மை பூத்துவிடுகிறது
ஒட்டுமொத்த இந்திய மண்ணின்
ஒவ்வொரு மாநிலத்துக்கும்
அவர் உரியவராகிறார்
என்றபோதிலும்
தமிழ் தமிழர் என்ற
காவல் தாண்டிய காதல்
எட்டிப்பார்க்கவே செய்கிறது
என்பதைத் தடுக்கமுடியவில்லை
அவர்தம் பதவிக்காலத்தில்
நாடு நன்மை காணட்டும்
பதவி அவரால்
பெருமை பூணட்டும்
டெல்லியின்
மொகல் தோட்டத்தில்
கோவை மல்லிகை பூத்திருக்கிறது
வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications