'தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ?' பாடகி சுசீலா குறித்து வைரமுத்து நெகிழ்ச்சி
சென்னை: கவிஞர் வைரமுத்து பழம்பெரும் பாடகி சுசீலா உடனான படத்தைப் பகிர்ந்து, நெகிழ்ச்சி அளிக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார்.
உலகெங்கும் புத்தாண்டு தினம் கோலாகலமாகப் கொண்டாடப்பட்டது. ஓமிக்ரான் அச்சத்திற்கு மத்தியில் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, பொதுமக்கள் புத்தாண்டைக் கொண்டாடினர்

கொரோனா உடனான போரில் வேக்சின் என்பது நமக்குக் கிடைத்த பேராயுதமாக உள்ளது. இந்த ஆயுதத்தைக் கொண்டு கொரோனாவை இந்த ஆண்டு வெல்லலாம் என்ற நம்பிக்கையுடன் புத்தாண்டை மக்கள் வரவேற்றனர்.
இந்நிலையில் கவிஞர் கவிஞர் வைரமுத்து பழம்பெரும் பாடகி சுசீலா உடனான படத்தைப் பகிர்ந்து, நெகிழ்ச்சி அளிக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டரில், "'புத்தாண்டுக்குப் பார்க்க வேண்டுமே' என்றேன்... 'உடல்நலக் குறைவால் உருமாறிக் கிடக்கிறேன்' என்றீர்... 'தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ?' என்றேன்.. சில்லென்று சிரித்தீர்.. அது மோகனமா? பூபாளமா? சொல்லுங்கள் சுசீலா அம்மா!" என்று ட்வீட் செய்துள்ளார்.
மேலும், பாடகி சுசீலா உடன் இருக்கும் படத்தையும் கவிஞர் வைரமுத்து பகிர்ந்துள்ள நிலையில், இதை ட்விட்டரில் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications