Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கம் எனக்கூறி.. பித்தளையை கொடுத்து லட்சக்கணக்கில் பணம் மோசடி.. சென்னை கும்பலுக்கு வலைவீச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தங்கம் எனக்கூறி பித்தளையை கொடுத்து லட்சக்கணக்கில் மோசடி செய்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்., சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரிதா(35).

கொளத்தூர் ஹரிதாஸ் மெயின் ரோடு பகுதியில் துணி கடை வைத்துள்ளார். இவரது துணிக்கடைக்கு கடந்த 9-ம் தேதி இரண்டு பேர் வந்து துணி எடுத்து உள்ளனர்.

அதன் பிறகு மறுநாள் மீண்டும் துணி எடுக்க வந்த அந்த நபர்கள் தங்களிடம் சில தங்க குண்டுமணிகள் இருப்பதாகவும் அவசரத் தேவைக்காக அதை விற்று தரும்படியும் கூறியுள்ளனர்.

மர்ம நபர்கள்

மர்ம நபர்கள்

குறைந்த அளவு பணம் கொடுத்தால் போதும் என்று கூறி தங்க குண்டுமணிகளைக் சரிதாவிடம் அவர்கள் கொடுத்து விட்டு சென்றுள்ளனர். சரிதா அதைக் கொண்டு சென்று கடையில் காண்பித்த போது அது ஒரிஜினல் தங்கம் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து மீண்டும் சரிதாவை தொடர்பு கொண்ட அந்த நபர்கள் ''அவசர தேவைக்காக எங்களுக்கு பணம் தேவைப்படுகிறது. ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க குண்டுமணிகள் எங்களிடம் உள்ளது. அதை வைத்துக் கொண்டு ரூ.10 லட்சம் கொடுத்தால் போதும்'' என்று கூறியுள்ளனர்.

 பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே..

பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே..

அதற்கு சரிதா எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறி உள்ளார். ''உங்களால் எவ்வளவு பணம் தர முடியுமோ அதைத் தாருங்கள் பின்னர் மீதி பணத்தை பெற்றுக் கொள்கிறோம்'' என்று அந்த நபர்கள் தொடர்ந்து கூறியுள்ளனர். இதனை நம்பிய சரிதா தான் வைத்திருந்த தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.4 லட்சத்து 74 ஆயிரம் ரெடி செய்து அந்த நபர்களை தொடர்பு கொண்டுள்ளார். பணத்தை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே கொண்டு வருமாறு அந்த நபர்கள் கூறியுள்ளனர்.

நகையையும் கொடுத்தார்

நகையையும் கொடுத்தார்

சரிதாவும் அந்த பணத்தைக் கொண்டு சென்றுள்ளார். அப்போது சரிதா தான் அணிந்திருந்த 3 சவரன் தங்க வளையல்களை கழட்டி அந்த கும்பலிடம் கொடுத்துவிட்டு தான் கொண்டு சென்ற பணத்தையும் கொடுத்துள்ளார். பிறகு அந்த நபர்கள் தாங்கள் வைத்திருந்த தங்க குண்டுமணிகளை சரிதாவிடம் கொடுத்துள்ளனர். சரிதா அதை வீட்டுக்கு எடுத்து வந்து அருகில் உள்ள நகைக் கடைக்குச் சென்று காண்பித்துள்ளார்.

பித்தளை

பித்தளை

அப்போது அவை தங்கம் இல்லை என்பதும் அனைத்தும் பித்தளை என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சரிதா தனது கணவரிடம் கூறி அழுதுள்ளார்.பிறகு இதே போன்ற சம்பவம் அயனாவரம் பகுதியில் நடைபெற்றதை தொலைக்காட்சி மூலம் அறிந்த சரிதா செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சரிதா கடையில் இருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கடைக்கு வந்த நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இதேபோன்று தங்க குண்டுமணி கொடுத்து ஏமாற்றிய சம்பவம் அயனாவரம் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. சென்னையில் இதுபோல் கும்பல் தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருவதால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+