வடிவேலு பட பாணியில் இளநீர் திருடிய நபர்.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்
சென்னை: இளநீர் திருடி தனியாக இளநீர் கடையை வைத்து நடத்தியவரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
சென்னை கே கே நகர் 80 அடி சாலையில் நடைபாதை ஓரமாக பல இளநீர் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு லிங்கம் என்பவர் சொந்தமாக இளநீர் கடை வைத்துள்ளார்.
இவர் சென்னை கே கே நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் கடந்த 30-ஆம் தேதி லாரி மூலம் கொண்டு வரும் இளநீர் காய்களை வாங்கி வந்து கடையில் சுவற்றின் ஓரமாக தார்ப்பாய் மூலம் மூடி வைத்து வீட்டுக்கு சென்று விட்டேன்.

கடை திறப்பு
அடுத்த நாள் வழக்கம் போல் கடையை திறக்கும் போது இளநீரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதையடுத்து புகாரை பெற்ற போலீஸார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மூன்று சக்கர வண்டியில் வரும் நபர் ஒருவர் இளநீரை திருடிச் செல்வது தெரியவந்துள்ளது.

போலீஸ் விசாரணை
ஆனால் யார் திருடுகிறார்கள் என்பது தெரியவில்லை. இதையடுத்து இளநீர் திருடியதாக சாலிகிராமத்தைச் சேர்ந்த ரஜினிகாந்த் என்பவரை பிடித்து கே கே நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

கோயம்பேட்டில் கடை
அப்போது இளநீர் குலைகளை திருடி கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் கடை விரித்து அதிக விலைக்கு விற்று சம்பாதித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து லிங்கம் கொடுத்த புகாரின் பேரில் இளநீர் திருடிய ரஜினிகாந்த் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோயில் காளை
இந்த சம்பவத்தை பார்த்தவுடன் விஜயகாந்த் நடித்த கோயில் காளை படம்தான் நினைவுக்கு வந்தது. அந்த படத்தில் நடிகர் கவுண்டமணி இளநீர் வியாபாரம் செய்து கொண்டிருப்பார். அப்போது அவரது கடையில் பணியாற்றும் செந்திலும் வடிவேலும் திருடுவர். கவுண்டமணி வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருக்கும் போது செந்தில் இளநீர் குலைகளை கயிறு போட்டு அதில் கட்டிக் கொடுக்க அதை வடிவேல் பத்திரப்படுத்துவார்.

காமெடி
இந்த திருட்டை கவுண்டமணி தெரிந்து கொள்வார். நேராக வடிவேலுவிடம் போய் அந்த கயிற்றை வாங்கிக் கொள்வார். செந்தில் கயிற்றை விடுடா என்பார். ஆனால் கயிறோ வராது. திரும்பி பார்த்தால் கவுண்டமணி. ஷாக்காகும் செந்தில், ஒன்னுல்லண்ண இளநீர் கயிற்றுல கட்டி விளாண்டுகிட்டு இருக்கோம் என்பார். நீங்கள் விளையாடுவதற்கு என் இளநீர் தான் கிடைச்சதா என இருவரையும் கவுண்டமணி அடிப்பார். இப்படி சினிமாவில் பார்த்த காட்சியை போல் நிஜத்திலும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications