அமித்ஷா எத்தனை குடும்பத்தை கெடுத்தாரு.. பரபரப்பாக பேசிய மன்சூர் அலிகான்.. போலீஸில் புகார்
மன்சூர் அலிகான் மீது இந்து மக்கள் முன்னணி போலீசில் புகார் அளித்துள்ளது
சென்னை: "அமித்ஷா என்ன பண்ணார்.. நாலு வருஷமா தலைமறைவா எதுக்காக இருந்தாரு.. எத்தனை குடும்பத்தை கெடுத்தாரு.. எத்தனை கொலை பண்ணாரு" என்று கேள்வி மேல் கேள்வி கேட்ட மன்சூரலிகான் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
முகிலனை நேற்று எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர். இதற்காக முதல் ஆளாக நாம் தமிழர் கட்சி பிரமுகரும், நடிகருமான மன்சூர் அலிகான் கோர்ட்டுக்கு வந்துவிட்டார். முகிலனை பார்ப்பதற்காக நீண்ட நேரம் அங்கு காத்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது:
"முகிலன் மேல பாலியல் புகாரா? ஒருத்தனுக்கு ஒருத்திதானே.. இவர் என்ன ஆயிரம் கோடி வெச்சிக்கிட்டு, பினாமியை போட்டுக்கிட்டு ஆடி கார்ல போயிட்டு இருந்தவரா? போராளிகளை கேவலப்படுத்ததான் இப்படி செய்யறாங்க?

அமித்ஷா
அமித்ஷா என்ன பண்ணார்? ஊடகங்கள் எல்லாம் இங்க இருக்கீங்க இல்லை? நாலு வருஷமா தலைமறைவா ஏன் இருந்தாரு? எத்தனை குடும்பத்தை கெடுத்தாரு? எத்தனை கொலை பண்ணாரு? இந்த பாஜக ஆட்சியில நார்த் இந்தியாவில எத்தனை பாலியல் வன்கொடுமை செய்துட்டு இருக்காங்க?

படுகொலை
இலங்கையில லட்சக்கணக்கான பாலியல் வன்கொடுமை செய்து, பச்சை படுகொலை பண்ணிட்டு இருக்காங்களே சிங்கள ராணுவ வீரர்கள்.. இந்த உலகம், இந்தியா முழுக்க என்ன பண்ணிட்டு இருந்துச்சு.. இது ஜனநாயகமா?

கோடீஸ்வரன்
இந்த அனில் அகர்வாலை கொண்டு வந்து உதைக்கணும்.. அவன் எப்பேர்ப்பட்ட கேடி, எப்பேர்பட்ட கோடீஸ்வரனா இருந்தாலும் சரி, அனில் அகர்வால் பம்பாயில ஒரு சாதாரண காய்லாங்கடையில ஆரம்பிச்சு இன்னைக்கு இந்தியாவை விலைக்கு வாங்கிட்டு உட்கார்ந்திருக்கான். என் மண்ணை அழிக்கிறான். அவனை நாங்க விட மாட்டோம்.

உடைப்பேன்
ஓட்டுக்கு பணம் வாங்கி வாக்களிப்போர் இருக்கும் வரை மோசமான அரசியல்வாதிகள் இருக்கதான் செய்வார்கள். உள்ளாட்சி தேர்தல் மட்டும் ஒழுங்காக நடத்தவில்லை என்றால் வாக்கு செலுத்தும் இயந்திரத்தை கொளுத்தும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். வாக்கு செலுத்தும் இயந்திரத்தில் கோளாறு இருக்கிறது. இதை டெல்லியில் நிரூபணம் செய்ய போகிறேன்." என்று கூறியிருந்தார்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications