போலீஸ்காரருக்கு எமனாக மாறிய ரேஸ் பைக்.. சென்னையில் காவலர் பலி! விபத்தை ஏற்படுத்திய இளைஞரும் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை போரூர் அருகே அதிவேகமாக சீறிப்பாய்ந்து வந்த உயர் ரக ரேஸ் பைக் மோதி இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்ற காவலர் உயிரிழந்துள்ளார். தாம்பரம் - மதுரவாயல் புறவழிச் சாலையில் ரோந்து சென்ற போரூர் காவல் நிலைய காவலர் குமரன் பலியானார்.

சென்னை தாம்பரம் - மதுரவாயல் புறவழிச் சாலையில் போரூர் காவல் நிலைய காவலர் குமரன் (50) இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அதிவேகமாக வந்த காவஸாகி நிஞ்சா ரேஸ் பைக் ஒன்று வேகமாக காவலர் குமரனின் வண்டி மீது மோதியது.

Chennai accident police

இதில் காவலர் குமரன் சம்பவ இடத்திலேயே பலியானார். ரேஸ் பைக்கை சாலையில் அதிவேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய இளைஞரும் படுகாயம் அடைந்துள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரேஸ் பைக் மோதி, பணியில் இருந்த போலீஸ்காரர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரேஸ் பைக்குகளை பொதுமக்கள் செல்லும் சாலையில் பயணிக்க தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

விபத்தை ஏற்படுத்திய ரேஸ் பைக்கான காவஸாகி நிஞ்சா, சுமார் 10 லட்சம் ரூபாய் விலை கொண்டது. இதுபோன்ற ரேஸ் பைக்குகளில் இளைஞர்கள் பொதுமக்கள் செல்லும் சாலைகளில் சீறிப் பாய்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று ரேஸ் இளைஞரின் ஆர்வக்கோளாறுக்கு, போலீஸ்காரர் பலியாகி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+