Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு பேருந்துகள் மீதான அபராதம் "திடீர்" வாபஸ்! முடிந்தது டிரைவர்கள் VS போலீஸ் பனிப்போர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள், காவல் துறையினர் இடையே மோதல் நிகழ்ந்த நிலையில் அரசு பேருந்துகள் மீது விதித்த அபராதங்களை காவல் துறை வாபஸ் பெற்றது.

நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு செல்லும் அரசு பேருந்தில் கடந்த 21 ஆம் தேதி காவலர் ஒருவர் ஏறினார். அப்போது அவரிடம் கண்டக்டர் டிக்கெட்ட கேட்ட போது எடுக்க முடியாது என்றார். இது தொடர்பான வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் அரசு பேருந்தில் அரசு பணியில் உள்ளவர்கள் எல்லாருக்கும் டிக்கெட் கிடையாது.

Police department withdraw the penalty imposed on Tamil nadu Government buses

நாங்களும் அரசு பணி செய்பவர்கள்தானே எங்களுக்கும் டிக்கெட் கிடையாது என கூறி வாக்குவாதம் செய்தாராம். இதைத் தொடர்ந்து அரசு பேருந்தில் போலீஸ்காரர்கள் பயணிக்க வாரண்ட் வேண்டும். இல்லை என்றால் டிக்கெட் எடுக்க வேண்டும் என கண்டக்டர் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த போலீஸ்காரர் டிக்கெட் எடுக்க மறுத்ததுடன் எல்லோருக்கும் ஒரே விதிமுறைகளை கொண்டு வாருங்கள்.

போக்குவரத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மட்டும் இலவசம். நாங்களும் அரசு வேலைதானே பார்க்கிறோம். எங்களையும் இலவசமாக நீங்கள் ஏன் பயணிக்க விடக் கூடாது என கேட்டு வாக்குவாதம் செய்தார். நாங்குநேரியில் நடந்த சம்பவத்தின் போது பேருந்து நடத்துநருடன் டிக்கெட் எடுக்காமல் வாக்குவாதம் செய்த காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசு பேருந்துகளுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்துள்ளனர். அது போல் நெல்லையிலிருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற 3 அரசு பேருந்துகளில் வள்ளியூர் போக்குவரத்து போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணியவில்லை, போக்குவரத்து விதிகளை சரியாக கடைப்பிடிக்கவில்லை, சீருடை சரியாக அணியவில்லை என கூறி ஒவ்வொரு பேருந்து ஓட்டுநருக்கும் தலா ரூ 500 அபராதம் விதித்தனர்.

சென்னை அருகே கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரே விதிகளை மீறி நிறுத்தப்பட்டிருந்த 25 அரசு, ஆம்னி பேருந்துகளுக்கு தலா 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்கள், காவல் துறையிநர் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் தமிழக உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்துத் துறை செயலாளர் பணீந்திர ரெட்டி இடையே தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட காவலரும் பேருந்து நடத்துவரும் சமாதானமாக பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் "நான் என்னோட கருத்தை சொன்னேன். நீங்கள் உங்களுடைய கருத்தை சொன்னீர்கள். பிறகு டிக்கெட் எடுத்து நீங்கள் பயணம் செய்தீர்கள், ஆனால் அது சம்பந்தமான வீடியோ சமூகவலைதளங்களில் பரவி பிரச்சினையாகிவிட்டது. இதற்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன் என கண்டக்டர் பேச, நானும் வருத்தம் தெரிவிக்கிறேன்.

இனி மேல் போக்குவரத்து துறையும் காவல் துறையும் நண்பர்களாக செயல்படுவோம் என காவலர் பேசுகிறார். இருவரும் கைகுலுக்கி, கட்டிப்பிடித்து சமாதானம் செய்து கொண்டு டீ குடித்தனர். இதையடுத்து அரசு பேருந்துகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படுவதாக காவல் துறை அறிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+