Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளை ‘டியர்’ என்றே அழைத்த டிஐஜி விஜயகுமார்.. இன்ஸ்பெக்டர் உருக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஐஜி விஜயகுமார் தற்கொலை போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த விஜயகுமார் அன்பானவர் என்றும், தனக்கு கீழே பணியாற்றும் அதிகாரிகளை சில சமயங்களில் திட்டிவிட்டால் கூட அவர்களை அழைத்து அன்பாகப் பேசுவார் என்றும், அவருடன் பணியாற்றிய போலீஸ் அதிகாரி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டது காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த விஜயகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த டிஜிபி சங்கர் ஜிவால் விரைகிறார். கூடுதல் டிஜிபி அருண் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில், காவல் ஆய்வாளர் அம்பேத்கார், டிஐஜி விஜயகுமார் பற்றிய தனது நினைவுகளை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

Police inspector ambedkar heartfelt post about Coimbatore dig vijayakumar

அம்பேத்கார் வெளியிட்டுள்ள பதிவில், "அதிகாலை அதிர்ச்சியுடன் விடிந்தது. விஜயகுமார் ஐ.பி.எஸ் அவர்களின் மறைவு. சிறந்த ஆன்மீக வாதி. அன்பானவர், இரக்க குணம் கொண்டவர். சில நேரங்களில் தன் கீழ் பணிபுரிபவர்களை திட்டிவிட்டாலும் அடுத்த நொடியே மறந்து பாசத்தை காண்பிப்பார். கடலூர் எஸ்.பியாக 2015ல் இருந்த போது அவரின் கீழ் பணிபுரிந்தேன். அதன்பிறகு 2017ல் க்யூ பிரிவில் மாறுதலாகி இருந்தேன். எனது உறவினருக்கு உடல் நிலை சரியில்லாத போது என்னை அழைத்து பேசினார். அதே மாதிரியான உடல் நிலை சரியில்லாமல் அவரது நெருங்கிய உறவினர் இருப்பதாக கூறினார்.

2016-17 காலகட்டத்தில் மனதளவில் தளர்வாகவே இருந்தார். க்யூபிரிவில் இருந்த என்னை மாறுதல் பெற்று வரும்படி கூறினார். அவரது உதவியால் சிதம்பரம் காவல் நிலையத்தில் சேர்ந்தேன். சில பல காரணங்களால் ஒரு சில மாதங்களில் அங்கிருந்தும் மாற்றப்பட்ட போதும் அழைத்து அன்புடன் பேசினார். முன்பைக் காட்டிலும் என்னிடம் ஒரு சகோதரரைப்போல் பாவித்து பேச ஆரம்பித்தார்.
இறுதியாக திருவாரூரில் சந்தித்தேன் மதிய உணவு வேளையின் போது சென்று சேர தாமதமாகியும் காத்திருந்து பார்த்தார்கள்.

அன்பானவர், டியர் என்கின்ற வார்த்தையையே என்னிடம் பேசும் போதும் சாட் பண்ணும் போதும் பயன்படுத்தினார். இளகிய மனம் படைத்தவர்.

Police inspector ambedkar heartfelt post about Coimbatore dig vijayakumar

காக்கிச் சீருடையை மிகவும் நேசித்தவர். இவ்வளவு விரைவாக இயற்கையில் கரைவார் என எதிர்பார்க்கவில்லை. மிஸ் யூ சார்! கம்பீரமாக இருப்பவர்கள் எல்லாம் எதையும் தாங்குபவர்கள் அல்ல, அவர்களுக்கும் மன நிம்மதி கெடும்.

அந்த நிம்மதியை கெடுப்பது,
1)மீடியாக்களின் அளவுக்கு மீறிய தாக்குதல்,
2)அரசியல் அதிகாரம் படைத்தவர்களின் அதிகார அணுகுமுறைகள்,
3)அதிகாரிகளின் அதிகார அணுகுமுறைகள்,
4)நீதிமன்ற வழக்குகள்,
5)குடும்பத்தில் பிரச்சனைகள், மருத்துவ பிரச்சனைகள்
இதனை ஒவ்வொரு அதிகாரிகளும் காவல்துறையில் பல காலகட்டத்தில் கடந்துவந்துள்ளார்கள். இனியும் வருவார்கள். இந்த மரணத்தை முன்னுதாரணமாக எவரும் எடுத்துக்கொள்ளவேண்டாம்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+