சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரிகள் இடையே மோதல்.. பாட்டிலால் தாக்கியதில் ஒருவர் காயம்! பரபர!
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் கண்காணிப்பாளர்கள் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளர்கள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பீகாரைச் சேர்ந்த கண்காணிப்பாளர் ரஞ்சன் குமாரை, அவினாஸ் பாபு ராவ் என்ற கண்காணிப்பாளர் தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தண்ணீர் பாட்டிலால் அவினாஸ் பாபு ராவ் தாக்கியதில் காயமடைந்த ரஞ்சன் குமார் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இரு அதிகாரிகளும் பணி நிமித்தமாக பேசிக் கொண்டிருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது மோதலாக மாறியதாகவும், வாட்டர் பாட்டிலால் தாக்கிக் கொண்டதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications