வாக்குச்சாவடிக்குள் காவலர்கள் நுழையக்கூடாது.. தமிழக போலீஸ் டிஜிபியிடம் இருந்து பறந்த உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் , போலீசாருக்கு டிஜிபி முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். வாக்குச்சாவடி அலுவலர் அனுமதியின்றி போலீசார் வாக்குச்சாவடிக்குள் நுழையக் கூடாது என்று டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு இன்னும் சில மணி நேரங்களில் முடிவடைய உள்ள நிலையில் பெரிய அளவில் எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய தமிழகம் முழுவதும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Police Personnel Must Not Enter Polling Booths Order Issued by the Tamil Nadu DGP

இந்த நிலையில், தமிழக டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் மிக முக்கிய உத்தரவு ஒன்றை போலீசாருக்கு பிறப்பித்துள்ளார். அதாவது, காவலர்கள் வாக்குச்சாவடிக்குள் அனுமதியின்றி நுழையக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் அனுமதி இருந்தால் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும்.

காவலர்கள் வாக்குச்சாவடியின் வெளிக்கதவு அருகிலேயே நின்று கடமையாற்ற வேண்டும். விதிகளை காவலர்கள் கண்டிப்பாக பின்பற்ற எஸ்பிக்கள், காவல் ஆணையர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்றும் டிஜிபி தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், டிஜிபியின் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+