பப்ஜி மதனுக்கு ஜாமீன் கூடாது.. வெளியே போய் மீண்டும் ஆபாச வீடியோக்களை ரிலீஸ் செய்வார்.. போலீஸ் கறார்
சென்னை: யூடியூபர் பப்ஜி மதனுக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீஸார் வாதம் செய்துள்ளனர்.
பப்ஜி விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்டது. எனினும் இந்த விளையாட்டை ஆன்லைனில் மதன்குமார் மாணிக்கம் என்பவர் விளையாடி வந்தார். 3 ஆண்டுகளுக்கு மேலாக தனது முகத்தையே காட்டாமல் ஆபாசமாக தனது யூடியூப் சேனலில் பேசி வந்தார்.
பப்ஜி விளையாட்டிற்கு அடிமையான சிறுவர்கள் மதனின் பேச்சுக்கு அடிமையாகினர். இதனால் ரசிகர்கள் பட்டாளத்தை வளர்த்து கொண்ட மதனுக்கு யூடியூப் மூலம் வருமானம் வந்தது.

பப்ஜி விளையாட்டு
இந்த வருமானம் மட்டுமல்லாமல் பப்ஜி விளையாட்டில் ஈடுபடும் இளைஞர்களிடம் தான் ஏழைகளுக்கு உதவுவதாகவும் மதன் பொய் கூறி தனது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்புமாறு கேட்டதால் இளைஞர்களும் நல்ல காரியம்தானே என பணத்தை வாரி இரைத்தனர்.

ஆபாசங்கள்
பணம் குவிய குவிய மதனின் ஆபாசங்களும் அதிகரித்தன. இதையடுத்து மோடி புகார்கள் மதன் மீது எழுந்தன. இதையடுத்து மதனையும் அவரது மனைவி கிருத்திகாவையும் போலீஸார் கைது செய்தனர். மதனின் வங்கிக் கணக்கில் இருந்த 4 கோடி ரூபாயை முடக்கினர். அவர்களது ஆடம்பர கார்களையும் பறிமுதல் செய்தனர்.

11 மாதங்கள் புழல் சிறையில்
இதனால் குண்டாஸில் மதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 11 மாதங்கள் புழல் சிறையில் உள்ளார். அவரது மனைவி ஜாமீனில் வெளியே உள்ளார். இந்த நிலையில் தன் மீதான குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மதன் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் போலீஸார் பதில் மனு தாக்கல் செய்ய தாமதமானதால் அது மதனுக்கு சாதகமாகி இரு வாரங்களுக்கு முன் குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்தது.

11 மாதங்கள் புழல் சிறையில்
இதனால் குண்டாஸில் மதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 11 மாதங்கள் புழல் சிறையில் உள்ளார். அவரது மனைவி ஜாமீனில் வெளியே உள்ளார். இந்த நிலையில் தன் மீதான குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மதன் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் போலீஸார் பதில் மனு தாக்கல் செய்ய தாமதமானதால் அது மதனுக்கு சாதகமாகி இரு வாரங்களுக்கு முன் குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்தது.

ஆதாரங்களை கலைத்துவிடுவார்
குண்டாஸ் சட்டம் ரத்து செய்யப்பட்டாலும் ஜாமீன் கிடைக்காமல் மதன் தொடர்ந்து சிறையில் உள்ளார். இந்த நிலையில் மதனின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் அவருக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது என போலீஸார் தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஜாமீன் வழங்கினால் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்வார். மேலும் அவருக்கு எதிரான ஆதாரங்களை கலைத்துவிடுவார் என போலீஸார் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications