தவெக தலைவர் விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி இல்லை.. புதுச்சேரி காவல்துறை சொன்ன காரணம்!
புதுச்சேரி: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், வரும் டிசம்பர் 5 ஆம் தேதி புதுச்சேரியில் 'ரோடு ஷோ' நடத்த திட்டமிட்டார். இதற்காக, அனுமதி கோரி முதல்வர் மற்றும் டி.ஜி.பியிடம் த.வெ.கவினர் மனு அளித்தனர். இந்நிலையில், புதுச்சேரியில் டிசம்பர் 5 ஆம் தேதி விஜய்யின் ரோடு ஷோவுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் 2026 ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி நடந்த பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தாமல் இருந்தார்.

இதனிடையே, கூட்ட நெரிசலை தவிர்க்க மக்கள் பாதுகாப்பு படை என்ற தொண்டர் படையை தவெக உருவாக்கி உள்ளது. இவர்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சேலத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த தவெக சார்பில் அனுமதி கேட்ட நிலையில் அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி அரங்கத்தில் அண்மையில் கட்சி நிர்வாகிகளை விஜய் சந்தித்து பேசினார். இந்த நிகழ்வில் QR கோடு உடன் வழங்கப்பட்ட நுழைவுச்சீட்டுகள் உள்ள 2000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் தவெக தலைவர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளார். அதனடிப்படையில் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த தவெக தலைவர் விஜய் முடிவு எடுத்தார்.
புதுச்சேரியில் டிசம்பர் 5 ஆம் தேதி விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்டு, அம்மாநில தவெக நிர்வாகி புதியவன் தலைமையில் தவெகவினர் புதுச்சேரி டிஜிபியிடம் அண்மையில் மனு அளித்தனர். அந்த மனுவில், தவெக தலைவர் விஜய் வரும் டிசம்பர் 5ஆம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை புதுச்சேரி எல்லையான காலாப்பட்டில் தொடங்கி அஜந்தா சிக்னல், உப்பளம் வாட்டர் டேங்க், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோவில் வரை சாலை மார்க்கமாக வந்து மக்களை சந்திக்க உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், உப்பளம் சோனாம்பாளையம் வாட்டர் டேங்க் அருகே ஒலிபெருக்கி மூலமாக மக்கள் மத்தியில் விஜய் உரையாற்ற உள்ளார். எனவே, தேவையான பாதுகாப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்' என குறிப்பிடபட்டிருந்தது. புதுச்சேரியில் 25 கி.மீ தூரம் விஜய் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டுள்ளார் எனத் தெரிவித்து, புதுச்சேரி தலைமை செயலகத்திலும் தவெகவினர் விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி கோரி மனு கொடுத்தனர்.
விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி தரக்கூடாது என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் டிஜிபிக்கு மனு அளித்தனர். கரூரில் விஜய் நடத்திய ரோடு ஷோவில் 41 பேர் இறந்துள்ளனர். இதை கருத்தில் கொண்டு புதுச்சேரி காவல் துறை ரோடு ஷோவுக்கு அனுமதி தரக்கூடாது. ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. மீறி அனுமதி தந்தால் போராட்டம் நடத்துவோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், புதுச்சேரியில் டிசம்பர் 5 ஆம் தேதி விஜய்யின் ரோடு ஷோவுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து மக்கள் அதிகளவில் திரண்டால் கரூர் போன்ற அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதி, தவெகவுக்கு புதுச்சேரி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
-
நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. மும்பைக்கு பறந்த விஜய்! பைனான்ஸ் செய்யும் அரசியல் புள்ளியின் வாரிசு -
Election Exclusive: பரபர பனையூர்..சைலண்டாய் லிஸ்டை ரெடி செய்த விஜய்! பாதித் தொகுதி வேட்பாளர்கள் ரெடி? யார் யருக்கு சீட்? -
வேலூரில் பெண் போஸ்ட் மாஸ்டருக்கு ஆபாச செய்கை காட்டிய தவெக புள்ளி.. இந்த நபரா? அதிர்ச்சி பின்னணி என்ன -
நக்கீரன் கோபால் அப்பவே சொன்னாரே.. கரூரில் நடந்தது உண்மையில் என்ன? ட்ரோன் காட்சிகள் உண்மையா? -
மீண்டும் சொதப்பிய விஜய்! கொஞ்சம் மிஸ்ஸாகியிருந்தா.. பெரிய அசம்பாவிதம் நடந்திருக்கும்! -
கரூரில் 'ஜனநாயகன்' ஷூட்டிங்?.. சிபிஐ அடுத்த ஆக்சன் என்ன? மாரிதாஸ் வைத்த பாயிண்ட்.. கவனிச்சீங்களா? -
சிபிஐயிடம் வசமாக சிக்கிய விஜய்? பிரசார வாகனம் 20 மீட்டர் தள்ளிப்போனது ஏன்? கரூர் நெரிசலில் ட்விஸ்ட் -
வட தமிழகத்தில் திமுகவுக்கு சிக்கல்? வன்னியர்கள் ஓட்டு மொத்தமா காலி? வேல்முருகன் முடிவால் நெருக்கடி! -
கோலாட்டம் ஆடிய மாணவியின் வாயில் ’விசில்’.. அத்தனை பேர் முன்னிலையில் தேர்தல் அதிகாரி செய்த செயல்! -
சங்கீதாவால் வந்த சட்டச் சிக்கல்.. விஜய்யின் வேட்புமனு தள்ளுபடியாக வாய்ப்பு? வெளியான ஷாக் பின்னணி! -
ஜனநாயகன் படம் பார்த்த மறு தணிக்கை குழுவினர்! தேர்தல் நடத்தை விதிகளால் எடுத்த முடிவு! -
பாஜகவுடன் உறவு.. புஸ்ஸி ஆனந்தை கோர்த்துவிட்ட ஆதவ் அர்ஜுனா.. சங்கடத்தில் சென்னை தவெக நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications